அஞ்சலியின் சீமந்தத்திற்கு வரும் கண்ணம்மா, வெண்பாவின் திட்டம் என்ன? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
அஞ்சலியின் சீமந்தத்திற்கு வரும் கண்ணம்மா, வெண்பாவின் திட்டம் என்ன? இன்றைய
அஞ்சலியின் சீமந்தத்திற்கு வரும் கண்ணம்மா, வெண்பாவின் திட்டம் என்ன? இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
அஞ்சலியின் சீமந்தத்திற்கு வரும் கண்ணம்மா, வெண்பாவின் திட்டம் என்ன? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், அஞ்சலியின் வளைகாப்பிற்கு கண்ணம்மாவும் லட்சுமியும் கிளம்புகின்றனர். லட்சுமி யாரு சீமந்தத்திற்கு வருகிறோம் என கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள். பின்னர் வெண்பாவும் அஞ்சலியின் வளைகாப்பிற்கு செல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், அஞ்சலியின் வளைகாப்பிற்கு செல்ல லட்சுமியை கண்ணம்மா கிளப்பி விடுகிறார். லட்சுமி சீமந்தம் என்றால் என்ன என கேட்க கண்ணம்மா விளக்கம் அளிக்கிறார். யாரோட சீமந்தம் என கேட்க கண்ணம்மா நேரில் பார்த்தால் தெரிந்து விட போகிறது என சொல்கிறார். ஆனால் லட்சுமி விடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள். நான் இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் போனதில்லை. நம்ம வீட்டிற்கு எந்த சொந்தக்கரவங்களும் வந்ததில்லை. பாட்டி, தாத்தா, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என யாருமில்லை ஏன் என கேட்கிறாள்.

சீரியல் நடிகரின் புதிய ப்ரோமோஷன் – மனைவியுடன் எடுத்த அழகிய போட்டோ ஷுட்!

உடனே கண்ணம்மா கோவப்பட்டு நான் ஒரு அனாதை அதான் யாரும் வரவில்லை. உனக்கு இஷ்டம் இருந்தால் இங்கே இரு இல்லையென்றால் அந்த டாக்டர் வீட்டிற்கே சென்று விடு என சொல்கிறார். உடனே லட்சுமி மன்னிப்பு கேட்கிறாள். பின்னர் சௌந்தர்யா ஹேமாவை கிளப்பி கொண்டிருக்கிறார். அப்போதும் அகிலும் பாரதியும் வருகின்றனர். ஹேமாவை அழைத்துக் கொண்டு அகிலை முன்னாள் செல்ல சொல்கின்றனர். பாரதிக்கு மருத்துவமனையில் வேலை இருப்பதாகவும் முடித்துவிட்டு வருகிறேன் என சொல்கிறார்.

இன்னைக்கு அஞ்சலிக்கு வளைகாப்பு ஆனால் யாரும் என்னை கூப்பிடவில்லை என வெண்பா கோபத்துடன் இருக்கிறார். ஆனால் எப்படியாவது அங்கே போகவேண்டும் என நினைத்து அஞ்சலிக்கு போன் செய்கிறார். உடனே அஞ்சலி நான் நேரில் வந்து கூப்பிடுகிறேன் என சொல்கிறார். எனக்காக இவ்வளவு தூரம் வர வேண்டாம் நானே வருகிறேன் என வெண்பா சொல்லி அழகான புடவை கட்டி ரெடி ஆகிறாள். செம அழகாக இருக்கீங்க என சாந்தி சொல்ல. பாரதி தனியாக இருப்பான் அவனுடன் நான் போய் நிற்க போகிறேன் என நினைத்து சந்தோசப்படுகிறார்.

‘ஆரம்பிக்கலாமா’ மிரட்டலாக வெளியான பிக் பாஸ் 5 டீஸர் – விக்ரம் லுக்கில் கமல்!

அஞ்சலி வீட்டில் வளைகாப்பிற்கான சமையல் ஏற்பாடு நடைபெறுகிறது. அப்போது சண்முகம் கண்ணம்மா பாரதியின் கல்யாண புகைப்படத்தை மாற்றுகிறார். பாக்கியா இதை ஏன் இங்க மாட்டி வைத்திருக்க, கண்ணம்மாவும் பாரதியும் பிரிந்துள்ளார்கள் என எல்லாருக்கும் தெரியும் இதை பார்த்தால் என்ன நினைப்பார்கள் என கேட்கின்றார்.

மேலும் கண்ணம்மாவும் வருவாள், டாக்டர் தம்பியும் வருவார். இதை பார்த்ததும் இருவருக்கும் எதாவது பிரச்சனை வர போகிறது என சொல்கிறார். அதெல்லாம் ஒன்னும் வராது இதை பார்த்த பின் இவ்வளவு அழகான வாழ்க்கை நாம் வாழ்ந்திருக்கிறோம் என இருவரும் நினைத்து பார்ப்பார்கள் என சண்முகம் சொல்கிறார்.இதை கழட்டி வை என சொல்லி பாக்கியா அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!