வெண்பாவை சுட்டுக் கொன்ற சௌந்தர்யா, ஹேமாவை சந்திக்கும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
வெண்பாவை சுட்டுக் கொன்ற சௌந்தர்யா, ஹேமாவை சந்திக்கும் கண்ணம்மா - இன்றைய
வெண்பாவை சுட்டுக் கொன்ற சௌந்தர்யா, ஹேமாவை சந்திக்கும் கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
வெண்பாவை சுட்டுக் கொன்ற சௌந்தர்யா, ஹேமாவை சந்திக்கும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவிற்கும் பாரதிக்கும் விவாகரத்து செய்ய ஏற்பாடு செய்தது வெண்பா தான் என தெரிந்த சௌந்தர்யா அவர் வீட்டிற்கு சென்று அவரை துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், சௌந்தர்யா கண்ணம்மாவிடம் உன்னை விவாகரத்து வாங்க சொல்லி மிரட்டுவது யாரு அந்த வெண்பா தான என கேட்க கண்ணம்மா ஆமாம் என சொல்கிறார். உடனே கோவப்பட்ட சௌந்தர்யா காரில் வெண்பா வீட்டிற்கு செல்ல போகிற வழியில் போலிஸிற்கு போன் செய்து ஒரு கொலை நடக்க போகுது இன்னும் 10 நிமிடத்தில் ஒரு பெண் மருத்துவர் துப்பாக்கியால் சுட்டு சாக போகிறார் என சொல்லுகிறார், போலீசார் வேண்டாம் என தடுக்க சௌந்தர்யா போனை வைத்துவிடுகிறார்.

வெண்பா வீட்டில் பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் விவாகரத்து வாங்கி கொடுக்க எல்லா ஏற்பாடும் செய்துவிட்டேன் என வெண்பா சொல்ல, சௌந்தர்யா அதை கேட்டு விடுகிறார். பின் வெண்பா சௌந்தர்யவை பார்த்து அதிர்ச்சி அடைய, எப்போ வந்தீங்க ஆண்டி என கேட்கிறார். பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் விவாகரத்து வாங்கி கொடுக்க போறேன் என சொன்னியே அப்பவே வந்துவிட்டேன் என சௌந்தர்யா சொல்ல, வெண்பா பதட்டம் அடைகிறார். அங்கே குடும்பமே இருவரையும் சேர்த்து வைக்க கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்க நீ தான் அவர்களை பிரிகிறாயா என சொல்லி துப்பாக்கியை எடுத்து நீட்டுகிறார்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,303 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

அப்போது வெண்பா வேண்டாம் என சொல்ல, துப்பாக்கியை பிடிங்கி சௌந்தர்யா பக்கம் காட்டுகிறார். உடனே சௌந்தர்யா வெண்பாவை கிழே தள்ளிவிட்டு துப்பாக்கி வைத்து சுடுகிறார். அந்த நேரம் பார்த்து கண்ணம்மா வர போலீஸும் வந்துவிடுகின்றனர். அவர்கள் சௌந்தர்யவை கைது செய்து அழைத்து வர, வெண்பா முழித்து துப்பாக்கியை எடுத்து சௌந்தர்யாவை சுட போகிறார். அப்போது கண்ணம்மா சௌந்தர்யவை சுடாமல் இடையே வருகிறார்.

அப்போது கண்ணம்மா இப்படியெல்லாம் நடக்கும் என நினைத்து வெண்பா பற்றிய உண்மையை மறைகிறார். பின் நீங்க தான் காரணம் என சொல்ல, என் குழந்தையை காணாமல் தேடி நான் அலைந்தது எல்லாம் போதும் என சொல்கிறார். இப்பவே என் பொண்ணை கூட்டிக் கொண்டு வந்து இதே வீட்டில் வளர்க்க வேண்டும் என கண்ணம்மா சொல்லி அங்கிருந்த்து ஆட்டோவில் கிளம்புகிறார். இது பாரதிக்கு தெரிந்தால் என்ன ஆகும் என சௌந்தர்யா வேணுவிற்கு போன் செய்கிறார். நிலைமை மோசமாகிவிட்டது.

பாரதி முன்பு ஹேமாவிடம் உண்மையை சொன்ன கண்ணம்மா? “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

பாரதியை ஹேமாவை அழைத்து கொண்டு வெளியே போக சொல்லுங்க என சௌந்தர்யா சொல்ல, பாரதியும் ஹேமாவும் அமர்ந்து போன் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். அப்போது அஞ்சலி வந்து ஹேமா இன்னும் சாப்பிடவில்லை என சொல்ல, சித்தி சொல்கிறார் சென்று சாப்பிடு என பாரதி சொல்கிறார். உடனே ஹேமா அவர் எனக்கு சித்தி இல்லை அம்மா என்று தான் கூப்பிடுவேன் என சொல்கிறார். அப்போது வேணு பாரதியை கிளம்ப சொல்ல, போன் வருகிறது.

அதில் ஹேமா தோழி ராஜி பேச, என் அப்பாவிற்கு நெஞ்சுவலி என சொல்லி அழுகிறார். உடனே ஹேமா பாரதியை அழைத்துக் கொண்டு போவோம் என சொல்ல, அந்த நேரம் பார்த்து அங்கே கண்ணம்மா வருகிறார். அவரை பார்த்ததும் சமையல் அம்மா என ஹேமா சந்தோசப்பட, கண்ணம்மாவும் ஹேமாவை பார்த்து சந்தோசமாக இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!