தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,303 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு பற்றிய முழு விவரங்களையும் சுகாதாரத்துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
தினசரி பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தினசரி எண்ணிக்கை கடந்த நாட்களில் அதிக அளவில் குறைந்துள்ளது. நாடு முழுவதும் பாதிப்புகள் குறைந்து வருவதால் இந்தியா 3 ம் அலை பாதிப்பு ஏற்படுவதை தடுத்து வருகிறது என்றே நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,303 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை விவகாரம் – மத்திய அமைச்சர்கள் ஆலோசனை!
இதனால் இதுவரை தமிழகத்தில், கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 26,79,568 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 13 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் இதுவரை 35,796 தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,428 பேர் தொற்று பதிப்பில் இருந்து குணடமடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,27,780 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்திற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.183.67 கோடி – மத்திய அரசு ஒதுக்கீடு!!
நேற்றைய மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 15,992 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 1,39,836 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,86,03,749 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 168 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்தம் இதுவரை 5,51,788 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர்.