விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடும் கண்ணம்மா, தடுப்பாரா சௌந்தர்யா? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி அஞ்சலியின் அம்மா பாக்கியாவை அழைத்து கண்ணம்மாவை விவாகரத்து செய்ய இருப்பதாக சொல்கிறார். பின் கண்ணம்மா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட போகிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி அஞ்சலியின் அம்மாவை அழைத்து கண்ணம்மாவை விவாகரத்து செய்ய போகிறேன் என சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். நாங்க இருவரும் பல வருடங்களாக பிரிந்து இருக்கிறோம், இனி சேர வாய்ப்பில்லை அதனால் தான் இந்த முடிவிற்கு வந்தேன். அவள் விவாகரத்து பண்ண தயாராக இருந்தால் அவளுக்கு 5 கோடி கொடுக்கிறேன் என சொல்கிறார். மேலும் கண்ணம்மாவை நீங்க தான் இதற்கு சம்மதிக்க வைக்க வேண்டும்.
அதற்காக உங்களுக்கு 1 கோடி ரூபாய் கொடுக்கிறேன் என சொல்கிறார். பாக்கியா காசுக்காக ஒரு பெண் வாழ்க்கையை கெடுப்பது தவறு தான், ஆனால் உங்களால் அவளுக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை, உங்களை விவாகரத்து செய்தால் அந்த காசு அவளுக்கு உதவியாக இருக்கும் என சொல்லி சம்மதம் தெரிவிக்கிறார். பின் கண்ணம்மா விவாகரத்து பற்றி நினைத்துக் கொண்டிருக்க லட்சுமி மருத்துவமனை சென்றுவிட்டு வருகிறார்.
தமிழகத்தில் 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்திவிட்டோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
அப்போது டாக்டர் அங்கிளிடம் போனோம் என சொல்ல வேணாம் என கண்ணம்மாவிடம் குமார் மற்றும் லட்சுமி பொய் சொல்லுகின்றனர். பின் வெண்பா வீட்டிற்கு வந்த சௌந்தர்யா, பாரதிக்கு எதற்கு போன் செய்கிறாய் என கேட்கிறார். உடனே வெண்பா கண்ணம்மாவை தப்பாக பேச, சௌந்தர்யா என் மருமகளை என்னிடமே இப்படி பேசுகிறாய் என சொல்லி அடித்து விடுகிறார். மேலும் இனிமேல் பாரதி வாழ்க்கையில் வர கூடாது என எச்சரித்து அங்கிருந்து கிளம்புகிறார்.
மறுபக்கம், பாரதி தான் ஒரு முடிவு எடுத்திருப்பதாக சொல்லி, வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஸ்வீட் கொடுக்கிறார். சௌந்தர்யா கடவுளிடம் பாரதி எந்த தவறான முடிவும் எடுத்திருக்க கூடாது என வேண்டிக் கொள்கிறார். பின் கண்ணம்மா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடலாமா என பழசு அனைத்தையும் நினைத்து பார்க்கிறார். பின் கையெழுத்து போட்ட பின் வெண்பா குழந்தையை தராமல் இருந்தால் என்ன செய்வது என கண்ணம்மாவிற்கு சந்தேகம் வருகிறது.
அடுத்த 3 மாதங்கள் அதிக கவனம் தேவை – சுகாதார செயலர் எச்சரிக்கை!
அப்போது வெண்பா போன் செய்து கையெழுத்து போட்டுட்டியா என கேட்கிறார். அப்போது கண்ணம்மா உன் மீது சந்தேகமாக இருக்கிறது. நீ கையெழுத்து போடாமல் இருந்தால் என்ன செய்வது என கேட்கிறார். உடனே வெண்பா அப்படி எல்லாம் செய்யமாட்டேன், நீ கையெழுத்து போட்டதும் உன் குழந்தையை உன்னிடம் கொடுத்துவிடுவேன் என சொல்கிறார். உடனே கண்ணம்மா கையெழுத்து போட தயாராக, அந்த நேரம் பார்த்து சௌந்தர்யா வருகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.