கண்ணம்மாவுடன் ஆறு மாதம் சேர்ந்து வாழமாட்டேன் என சொல்லும் பாரதி, புதிதாக வீட்டின் அருகே குடியேறும் வக்கீல் அக்கா- இன்றைய எபிசோட்!

0
கண்ணம்மாவுடன் ஆறு மாதம் சேர்ந்து வாழமாட்டேன் என சொல்லும் பாரதி, புதிதாக வீட்டின் அருகே குடியேறும் வக்கீல் அக்கா- இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவுடன் ஆறு மாதம் சேர்ந்து வாழமாட்டேன் என சொல்லும் பாரதி, புதிதாக வீட்டின் அருகே குடியேறும் வக்கீல் அக்கா- இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவுடன் ஆறு மாதம் சேர்ந்து வாழமாட்டேன் என சொல்லும் பாரதி, புதிதாக வீட்டின் அருகே குடியேறும் வக்கீல் அக்கா- இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி இன்னும் 3 நாட்கள் தான் இருப்பேன் என சொல்ல சௌந்தர்யா முடியாது என சொல்கிறார். பின் கண்ணம்மா வீட்டில் கீழே புதிய வக்கீல் வர அவர் கண்ணம்மாவிற்கு ஆதரவாக இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி சாப்பிட்டு விட்டு வர இன்னும் கொடு போடுறதை விடவில்லையா நீ என கேட்கிறார். ஆமாம் இங்கே நான் ஆறு நாட்கள் தான் இருப்பேன் அதற்கு மேல் இருக்கமாட்டேன் என பாரதி சொல்கிறார். அதற்கு அப்பறம் எங்கே இருப்ப என சௌந்தர்யா கேட்க, நம்ம வீட்டில் தான் என பாரதி சொல்கிறார். ஆனால் நீதிமன்றத்தில் கேட்டால் என்ன சொல்வது என கேட்க, பொய் சொல்லுங்க என பாரதி சொல்கிறார். நான் ஏன் பொய் சொல்ல வேண்டும் என சௌந்தர்யா கேட்க, நான் உங்க பையன் அதனால் தான் என பாரதி சொல்கிறார். நீ என் பையனாக இருந்தால் நான் பொய் சொல்ல வேண்டுமா, நீதிமன்றம் உத்தரவின் படி நீ இங்கே தான் இருக்க வேண்டும் இல்லை என்றால் நானே வக்கீலாக மாறுவேன் என சொல்கிறார்.

பின் கண்ணம்மா வீட்டிற்கு புதிதாக ஒருவர் வந்து காபி தூள் கேட்கிறார். யாரு நீங்க என கேட்க, நான் உங்க வீட்டின் கிழே புதிதாக வந்திருக்கேன் நான் ஒரு வக்கீல் என சொல்கிறார். பாரதியை பார்த்து உங்களை எங்கையோ பார்ததது போல இருக்கே என அவர் சொல்ல, நீங்க கோட்டிற்கு வந்திங்களே நீங்க பாரதி இவங்க கண்ணம்மா தான, விவாகரத்து கேட்டு பதிவு செய்தீர்களே உங்க கேஸ் கோர்ட்டில் நடக்கும் போது நான் அங்கே தான் இருந்தேன் நீதிபதி கூட எனக்கு தெரிந்தவர் தான் என சொல்கிறார். நீங்க 2 பேரும் சேர்ந்து வாழறீங்களா இல்லை 6 நாள் இருக்கீங்களா என நான் தினமும் பார்ப்பேன் என சொல்கிறார்.

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

பாரதி மருத்துவமனையில் இருக்க கண்ணம்மா வருகிறார். மறுபடியும் வந்துட்டியா, உன் சந்தன வாசனையை காட்டி என்னை வேலை செய்யவிடாமல் இருக்க போகிறாயா நான் அதற்கெல்லாம் அரசமாட்டேன் என சொல்கிறார். கண்ணம்மாவிற்கு என்ன சொல்கிறார் என தெரியாமல் இருக்க, பாரதி என்ன இன்னும் மறையாமல் இருக்கா என்று நினைத்து கண்ணம்மாவை கிள்ளி பார்க்கிறார். கண்ணம்மா என்ன பண்றீங்க என கேட்க, தினமும் என் நினைப்புடன் தான் இருக்கீங்களா என சந்தோசப்படுகிறார். பின் பாரதியை கிள்ளி கனவில்லை என சொல்கிறார். எதற்கு இங்கே வந்தாய் என பாரதி கேட்க எனக்கு தலைவலியாக இருக்கிறது அதனால் தான் வந்தேன் என சொல்கிறார்.

திருப்பூரில் நாளை (டிச.15) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

உனக்கு எல்லாம் நான் மருத்துவம் பார்க்க மாட்டேன் என சொல்ல, நானும் மத்தவங்க மாதிரி வரிசையில் நின்று தான் வந்திருக்கேன் எனக்கு ஏன் பார்க்கமாடீங்க என கேட்கிறார். உனக்கு பார்க்க மாட்டேன் என சொல்ல வக்கீல் அக்கா வருகிறார். அவர் வந்து நோயாளிக்கு மருத்துவம் பார்க்க மாட்டேன் என சொல்வது சட்டத்திற்கு புறம்பானது என சொல்ல, பாரதி வேறு வழி இல்லாமல் மருத்துவம் பார்க்கிறார். கண்ணம்மாவை பார்த்துவிட்டு மருந்து எழுதி கொடுக்க கண்ணம்மா கிளம்புகிறார். பீஸ் யாரு கொடுப்பா என பாரதி கேட்க எவ்வளவு என கண்ணம்மா கேட்கிறார். 1500 ரூபாய் என சொல்ல, என்ன வெறும் மாத்திரைக்கு 1500 ரூபாயா என அதிர்ச்சி அடைகிறார். பின் கண்ணம்மா என் வீட்டில் சாப்பிடத்தற்கு 1545 ரூபாய் கொடுக்க வேண்டும் என சொல்ல, பாரதி அவரை கிளம்ப சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!