கண்ணம்மா வாழ்க்கையை விட்டு செல்ல பேரம் பேசும் பாரதி, வெண்பாவிடம் பொய் சொல்லும் சாந்தி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
கண்ணம்மா வாழ்க்கையை விட்டு செல்ல பேரம் பேசும் பாரதி, வெண்பாவிடம் பொய் சொல்லும் சாந்தி - இன்றைய
கண்ணம்மா வாழ்க்கையை விட்டு செல்ல பேரம் பேசும் பாரதி, வெண்பாவிடம் பொய் சொல்லும் சாந்தி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
கண்ணம்மா வாழ்க்கையை விட்டு செல்ல பேரம் பேசும் பாரதி, வெண்பாவிடம் பொய் சொல்லும் சாந்தி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி ” பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி கண்ணம்மாவிடம் உனக்கு ஒரு பெரிய பணம் கொடுக்கிறேன் நீ என்னை பிரிந்து சென்றுவிடு என சொல்கிறார். பின் சாந்தி பாரதி பற்றி வெண்பாவிடம் பாரதி சேர்ந்து வாழவில்லை என பொய் சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி இரவு மோர் வாங்கி கொடுக்க காரில் உட்கார்ந்து கண்ணம்மா மோர் நன்றாக இருக்குமோ என பார்த்துக் கொண்டிருக்கிறார். பின் பாரதி இன்னொரு டம்ளர் மோர் வாங்கி கண்ணம்மாவிற்கு கொடுக்கிறார். கண்ணம்மா அதை வாங்கி குடித்து நன்றாக இருக்கிறது என சொல்கிறார். அடிக்கடி இங்கே வருவீங்களா என கண்ணம்மா கேட்க எப்பவாவது நைட் இந்த பக்கம் வந்தா வருவேன் என சொல்கிறார். பாரதி காசு கொடுக்க, கண்ணம்மா குடித்ததற்கு காசு கொடுக்கிறார். புருசனும் பொண்டாட்டியும் தனியாக காசு கொடுக்கிறீங்க என மோர் கடைக்காரர் சொல்கிறார்.

பின் கண்ணம்மா வீட்டில் மாவு அரைக்க நேரமாகிவிட்டது என புலம்பிக் கொண்டே மாவு அறைகிறார். அப்போது பாரதி எழுந்து வர கண்ணம்மா வர 2 மணி இருக்குமே அப்பறம் தூங்கி எப்போது எழுந்து இவள் வேலை செய்கிறாள். 4 மணி நேரம் கூட தூங்காமல் வேலை செய்கிறாள் என நினைத்து பார்க்கிறார். இவளை பார்த்து கஷ்டப்பட வேண்டாம் நாம 6 நாட்கள் மட்டும் தான் இங்கே இருக்க வந்திருக்கோம் இவள் நமக்கு துரோகம் செய்தவள். இவள் கஷ்டத்தை பார்த்து இறங்கி வர வேண்டாம் என நினைக்கிறார்.

கர்ப்பமாக இருந்து கொண்டு வீடியோ வெளிட்ட “ராஜா ராணி 2” ஆல்யா மானசா – ரசிகர்கள் வாழ்த்து!

கண்ணம்மாவிடம் சென்று எத்தனை மணிக்கு எழுந்தாய் என கேட்கிறார். 5 மணிக்கு என சொல்ல, 2 மணிக்கு தான தூங்கினோம் என சொல்கிறார். எப்போதும் சீக்கிரம் தூங்கி எழுந்திருப்பேன் இன்று தான் நேரமாகிவிட்டது என கண்ணம்மா சொல்கிறார். பாரதி இப்படி நீ கஷ்டப்படுவதற்கு ஒரு ஆப்பர் தருகிறேன் என சொல்கிறார். நான் நீ வாழ்க்கை முழுவதும் சந்தோசமாக இருக்க பணம் கொடுக்கிறேன் என பாரதி சொல்ல, எவ்வளவு வேண்டும் என கேட்கிறார். என் வாழ்க்கைக்கு எவ்வளவு தருவீங்க என கேட்க, 3 கோடி தருகிறேன் என பாரதி சொல்கிறார்.

அப்போது கண்ணம்மா நீங்க சொல்வதற்கு நான் ஒப்புக் கொள்கிறேன் என சொல்ல, பாரதி பணத்தை வாங்கி கொண்டு என் கண்ணில் படாமல் எங்கையாவது சென்று விட வேண்டும் என சொல்கிறார். பின் கண்ணம்மா நான் போறேன் ஆனால் என் புருஷன் என சொல்லி பணத்தை கொடுக்க வேண்டும் என கண்ணம்மா சொல்கிறார். நீங்க என் புருஷனாக 10ரூபாய் கொடுத்தால் கூட எனக்கு போதும் என கேட்கிறார். பாரதி கோவமாக இருக்க, அப்படியே பாத்ரூம் போகாதீங்க கழுவி விட போகிறேன் என சொல்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் குமரனுக்கு கிடைத்த விருது – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ஆனால் பாரதி கேட்காமல் பாத்ரூம் சென்று அங்கே வழுக்கி விழுகிறார். உடனே கண்ணம்மா ஓடி சென்று அவரை தூக்க பாரதி மீது கண்ணம்மா கையில் இருந்த மாவு ஓட்டுகிறது. நான் தான் சொன்னேன் உள்ளே பார்த்து செல்லுங்கள் என என்ன அவசரம் என கண்ணம்மா கேட்க, பாரதி கோபப்படுகிறார். பின் சாந்தி வெண்பாவிடம் போன் பேச, பாரதி சேர்ந்து வாழ வில்லையே என கேட்கிறார். இல்லை என சாந்தி பொய் சொல்ல, வெண்பா அவன் என்னுடைய பாரதி ஆச்சே என சொல்கிறார். அவன் என்னை வெளியே எடுக்கமாட்டேன் என ஏன் சொன்னான் அவனிடம் மறுபடியும் பேசு என வெண்பா சொல்கிறார்.

சாந்தி சரி என சொல்ல, ஏன் பொய் சொன்ன என மாயாண்டி கேட்கிறார். வெண்பா அம்மாக்கு தெரியவேண்டாம் என நினைத்தேன் என்று சாந்தி சொல்கிறார். லட்சுமி ஹேமா கிளம்பி இருக்க லட்சுமி இந்நேரம் எங்க குமார் மாமா வந்துருப்பாங்க. நான் குமார் மாமா ஆட்டோ என எல்லாத்தையும் மிஸ் செய்கிறேன் என லட்சுமி சொல்கிறார். நானும் டாடியை மிஸ் செய்கிறேன் என ஹேமா சொல்ல, அம்மாவிற்கு யாருமில்லை என லட்சுமி சொல்கிறார். நாம பாட்டியிடம் பேசி பார்த்துவிட்டு வருவோம் என ஹேமா சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!