கண்ணம்மாவிற்கு ஏசி வாங்கி தரும் சௌந்தர்யா, உடல்நிலை குறித்து டைரி எழுதும் அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி, ஹேமா ஏசி இல்லாமல் தூங்குவதை நினைத்து சௌந்தர்யாவுடன் கவலைப்படுகிறார். உடனே கண்ணம்மாவிற்கு சௌந்தர்யா ஏசி வாங்கி தருகிறார். அஞ்சலி அகிலனுக்கு தன்னுடைய உடல்நிலையை பற்றி டைரியில் எழுதி வைக்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி ஹேமா ஏசி இல்லாமல் கஷ்டப்படுவதையும், கண்ணம்மா உடன் இருக்கும் போது ஏன் இவ்வளவு சந்தோசமாக இருக்கிறாள் என யோசித்து கொண்டிருக்கிறார். ஹேமா ஏசி இல்லாமல் கஷ்டப்பட நான் மட்டும் எதற்கு ஏசியில் தூங்கணும் என நினைத்து ஏசியை ஆப் செய்கிறார். அப்போது அங்கே சௌந்தர்யா வர பாரதி ஹேமாவை நினைத்து கவலைப்படுகிறார்.
RTE மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 13வரை கால அவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு அறிக்கை!
உடனே சௌந்தர்யா ஹேமாவை பார்க்க செல்கிறார். ஹேமாவிடம் கண்ணம்மா எங்கே என்று கேட்க அவர் வெளியே போயிருக்கிறார் என்று தெரிவிக்கிறாள். லட்சுமியை பற்றி கேட்க அவள் ஆட்டோவில் வெளியே போயிருக்கிறாள் என்று சொல்கிறாள். பின்னர் சௌந்தர்யா ஹேமாவை காரில் ஏசி ஓடுகிறது போய் அமர சொல்ல உடனே ஹேமா செல்கிறாள்.
பின்னர் சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு ஏசி வாங்கி தருகிறார். கண்ணம்மா வாங்க மறுக்கிறார். பாரதி ஹேமா ஏசி இல்லாமல் இருப்பதை நினைத்து கவலைபடுவதையும், ஹேமாவும் ஏசி இல்லாமல் கஷ்டப்படுகிறாள் ஆனால் உன்னோடு இருக்க வேண்டும் என்பதற்காக பொறுத்து கொள்வதாக தெரிவிக்கிறார். உடனே கண்ணம்மா ஏசி மாட்ட சம்மதம் தெரிவிக்கிறார்.
3 வது அலையை சந்திக்க தயார் நிலையில் தமிழகம் – சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு!
அஞ்சலி தனது உடல்நிலை குறித்து டைரியில் எழுதி வைக்கிறார். அப்போது அகில் அங்கே வந்து ஏற்கனவே அஞ்சலி பேசியதை நினைத்து கோவமடைகிறார். அஞ்சலி மன்னிப்பு கேட்டும் அகில் ஏற்க மறுக்கிறார். பின்னர் கண்ணம்மா ஹேமாவிடம் உன் அப்பாவை எவ்வளவு பிடிக்கும் என்று கேட்க ஹேமா ரொம்ப பிடிக்கும் என்று சொல்கிறாள். அதை பார்த்து லட்சுமி தனக்கு தந்தை இல்லை என்று நினைத்து ஏங்குகிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!