RTE மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 13வரை கால அவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு அறிக்கை!
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்களை அரசு இட ஒதுக்கீடு முறையில் சேர்க்கும் RTE திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஆகஸ்ட் 3ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு:
நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் சமூக, பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் எல்.கே.ஜி அல்லது ஒன்றாம் வகுப்பு என தொடக்க வகுப்புகளில் ஒதுக்கப்படுகிறது. இந்த நடைமுறை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 8,300 தனியார் பள்ளிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் எல்.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்பில் 1,03,330 இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அன்னை தமிழில் அர்ச்சனை’ அறிவிப்பு பலகை – முதல்வர் வெளியீடு!
இதற்காக கடந்த ஜூலை 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று வரை 73,086 விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டுள்ளன. RTE முறையில் மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்த்தாலும், அதன்பின்னர் பல காரணங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் பலரும் இந்த ஆண்டு RTE முறையில் சேர்ப்பதற்கு தயங்குகின்றனர் என்று அரசுக்கு தகவல்கள் வந்தது.
TN Job “FB Group” Join Now
இதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும், கொரோனா ஊரடங்கு காரணங்களை முன்னிட்டும் RTE சேர்க்கைக்கான விண்ணப்ப கால அவகாசம் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. RTE திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.