3 வது அலையை சந்திக்க தயார் நிலையில் தமிழகம் – சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு!

0
3 வது அலையை சந்திக்க தயார் நிலையில் தமிழகம் - சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு!
3 வது அலையை சந்திக்க தயார் நிலையில் தமிழகம் - சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு!
3 வது அலையை சந்திக்க தயார் நிலையில் தமிழகம் – சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா 3ம் அலையை சந்திக்க தேவையான அனைத்து விதமான மருத்துவமனைகள் மேம்பாடு, மருந்துகள், தேவையான ஆக்ஸிஜன் கையிருப்பு போன்றவற்றுடன் தமிழகம் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னேற்பாடுகள்:

தமிழகத்தில் கடந்த மார்ச் மத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்றின் 2 அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் மே மத்தில் புதிய ஆட்சி வந்ததும், நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முழு வீச்சில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட வாரியாக தேவையான அனைத்து நடவ்டிக்கைகளையும் மேற்கொண்டார். மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்தது.

ஒலிம்பிக் வீராங்கனை பி.வி.சிந்து நாடு திரும்பினார் – டெல்லியில் அமோக வரவேற்ப்பு!

இதனால் தமிழகத்தில் புதிதாக ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகள் உருவாக்கப்பட்டன. வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையில் ஆக்சிஜன் அளவுக்கு அதிகமாக தயாரிக்கப்பட்டதால், பாதிப்புகள் வெகுவாக குறையத் தொடங்கியது. இந்நிலையில், விரைவில் நாடு முழுவதும் கொரோனா 3ம் அலை பாதிப்பு பரவ இருப்பதாகவும், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்க இருப்பதாகவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இதனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் 3வது அலையை தடுக்கவும், 3வது அலை வந்தால், அதை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை காக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவ மனைகள், கல்லூரிகள், பள்ளிகள், தற்காலிக மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 3வது அலை எந்த வகையில் வந்தாலும் அதை சமாளிக்க தற்போது தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா 2ம் அலை இன்னும் முடியவில்லை – சுகாதாரத்துறை அறிவிப்பு!

மாநிலம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அதிக அளவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன. மேலும் தேவையான அளவுக்கு மருந்துகள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், சென்னை காவல்துறை சார்பில் தற்போது வார் ரூம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில் இந்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!