லட்சுமிக்காக வேலைக்கு வந்ததாக சொல்லும் கண்ணம்மா, சௌந்தர்யாவை சந்தித்த ஷர்மிளா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
லட்சுமிக்காக வேலைக்கு வந்ததாக சொல்லும் கண்ணம்மா, சௌந்தர்யாவை சந்தித்த ஷர்மிளா - இன்றைய
லட்சுமிக்காக வேலைக்கு வந்ததாக சொல்லும் கண்ணம்மா, சௌந்தர்யாவை சந்தித்த ஷர்மிளா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
லட்சுமிக்காக வேலைக்கு வந்ததாக சொல்லும் கண்ணம்மா, சௌந்தர்யாவை சந்தித்த ஷர்மிளா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவிடம் சௌந்தர்யா புது வேலை பற்றி பேச லட்சுமி ஹேமாவிற்காக தான் இந்த வேலையில் சேர்ந்தேன் என சொல்கிறார். பின் வெண்பா அவருடைய அம்மா உடன் வர சௌந்தர்யா ஷர்மிளாவிடம் கல்யாணத்தை பற்றி பேசுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா பாரதிக்கு வந்த பூக்களை எடுத்து வைத்து கொண்டிருக்க அப்போது சௌந்தர்யா வருகிறார். நீ எதற்கு இந்த வேலைகளை எல்லாம் செய்கிறாய் என கேட்க அதற்கு கண்ணம்மா என்னுடைய வேலை அது தான அதனால் தான் செய்கிறேன் என சொல்கிறார். என்னை பார்த்ததும் என்ன சொல்கிறார் உங்க புள்ள என கேட்க அவன் ஒன்றும் சொல்லவில்லை என சௌந்தர்யா பேசி சமாளிக்கிறார். ஆனால் கண்ணம்மா உங்களுடைய திட்டத்தின் படி தான் நான் வேலைக்கு வந்திருப்பதாக சொல்லி இருப்பாரே என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

நான் வேலை செய்யும் இடத்தில் அவர் வேலை செய்யமாட்டேன் என சொல்லி இருப்பார். ஆனால் என்ன நடந்தாலும் நான் இந்த வேலையில் தான் இருப்பேன் என சொல்கிறார். பின் சௌந்தர்யா நீ எப்படி இங்கே என கேட்க எனக்கு வேலை தெரியாது தான் ஆனால் கற்றுக் கொள்கிறேன் என விக்ரம் சாரிடம் சொல்லி இருக்கிறேன் என சொல்கிறார். பின் லட்சுமி ஹேமா என இரு குழந்தைகள் இருக்கிறது. இருவரும் பெண் குழந்தைகள் அதனால் அவர்களின் எதிர்காலத்திற்கு எதாவது சேர்க்க வேண்டும் என சொல்கிறார். அப்போ இனிமேல் ஸ்கூலிற்கு சாப்பாடு கொண்டு போக மாட்டியா என கேட்க அப்படி எல்லாம் இல்லை அந்த வேலைகளை காலையில் முடித்துவிட்டேன் என சொல்கிறார்.

இப்படி கஷ்டப்பட வேண்டுமா என கேட்க, இங்கே நிறைய சம்பளம் கொடுக்கிறார்கள். லட்சுமி படிப்பிற்கு போக மீதி பணம் இருக்கும் என கண்ணம்மா சொல்கிறார். பின் காரில் வெண்பாவும் ஷர்மிளாவும் வந்து இறங்குகின்றனர். அப்போது வெண்பாவை பார்த்து விக்ரம் யார் என தெரியாமல் இருக்கிறார் சௌந்தர்யாவும் வெண்பா உடன் வந்திருப்பது யார் என தெரியாமல் இருக்கிறார். பின் பாரதி இவர்கள் என்னுடைய விருந்தாளி என சொல்லி வெண்பாவை டாக்டர் என அறிமுகம் செய்து வைக்கிறார். அப்போது சௌந்தர்யா வெண்பா தான் டாக்டர் வேலை பார்க்க கூடாது என கோர்ட் ஆர்டர் இருப்பதாக சொல்கிறார்.

தமிழகத்தில் தமிழர்களுக்கு 75% வேலைவாய்ப்பு வழங்கும் சட்டம் – அமைச்சர் விளக்கம்!

பின் ஷர்மிளா சௌந்தர்யாவை பார்த்து நீங்க தான் பாரதியின் அம்மாவா உங்களிடம் நிறைய பேச வேண்டும் என சொல்கிறார். பின் வெண்பாவை அமர வைத்து கண்ணம்மாவை அழைத்து சாப்பாடு கொடுக்க சொல்கிறார் பாரதி. அப்போது ஷர்மிளா கண்ணம்மாவை பார்த்து அதிர்ச்சி அடைய கண்ணம்மா சாப்பாடு கொடுத்துவிட்டு திமிராக பேசுகிறார். பின் ஷர்மிளா இது தான் அன்று ரோடில் பார்த்த பெண் என சொல்கிறார். ஷர்மிளா சௌந்தர்யாவை சந்தித்து பேச உங்களை பற்றி வெண்பா நிறைய சொல்லி இருக்கிறாள். உங்களை அமெரிக்கா அழைக்க வேண்டும் என நினைத்தேன் என சொல்கிறார். பின் சௌந்தர்யா இத்தனை ஆண்டுகளாக வெண்பாவை தெரியும் ஆனால் உங்களை தெரியாது என்ன விஷயமாக வந்திருக்கீங்க என கேட்கிறார்.

அப்போது வெண்பாவிற்கு நிறைய நேரம் கொடுத்துவிட்டேன் 10 ஆண்டுகளாக நேரம் கொடுத்ததும் அவள் திருமணம் செய்யவில்லை அதனால் நல்ல பையனை பார்த்து திருமணம் செய்து வைக்க தான் நான் வந்திருக்கிறேன் என சொல்கிறார். அதை கேட்டு சௌந்தர்யா நல்ல பையனை திருமணம் செய்து வைங்க ஆனால் ஏற்கனவே திருமணம் ஆனவனை வேண்டாம் என சொல்கிறார். வெண்பாவிற்கு திருமணம் ஆகவில்லை அதனால் திருமணம் ஆன பையனை திருமணம் செய்ய வேண்டாம் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!