கண்ணம்மாவின் திருமண ஆல்பத்தை பார்த்து திகைத்துப்போன லட்சுமி – உண்மைகள் தெரிய வருமா?
எப்படியாவது தனது அப்பாவை கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற நோக்கில் சுற்றி கொண்டிருக்கும் லட்சுமி தற்போது கண்ணம்மாவின் திருமண ஆல்பத்தை பார்த்து திகைத்து நிற்பது போல செய்திகள் வெளியாகியுள்ளன.
பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே கண்ணம்மா தனது பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது அனைவரின் முன்னிலையிலும் லட்சுமியின் அப்பா யார் என்பதை சொல்லப்போகிறேன் என கூறியிருந்தார். கண்ணம்மா அனைத்து உண்மைகளையும் கூறிவிடுவார் என எதிர்பார்த்த சமயத்தில் பாரதி அதனை தடுத்துவிட்டார். லட்சுமியும் இனிமேல் நான் அப்பாவை குறித்து உங்களிடம் கேட்டு கஷ்டப்படுத்த மாட்டேன் என கண்ணம்மாவிடம் கூறிவிடுகிறார். ஆனாலும் லட்சுமி அப்பாவை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மாற்றப்பட்ட முல்லை கதாபாத்திரம் – ப்ரோமோ ரிலீஸ்!
தனது அப்பாவை கண்டுபிடித்து தாருங்கள் என போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் தனது தோழியின் அம்மாவிடம் லட்சுமி உதவி கேட்கிறார். உங்கள் அப்பா புகைப்படம் மட்டும் இருந்தால் போதும் கண்டிப்பாக உனது அப்பாவை கண்டுபிடித்துவிடலாம் என போலீஸ் கூறுகிறார். உடனே லட்சுமி போட்டோவை கண்டுபிடிக்கும் தீவிர வேட்டையில் இறங்கி விடுகிறார். ஒருபுறம் லட்சுமி இன்னும் வீட்டிற்கு வரவில்லை என கண்ணம்மா, குமார் அண்ணாவுடன் சேர்ந்து லட்சுமியை தேடி செல்கிறார். ஆனால் லட்சுமியை அழைத்துக்கொண்டு பாரதி வீட்டிற்கு வருகிறார்.
அப்போது லட்சுமி தனது அப்பாவின் புகைப்படத்தை தேட வேண்டும் என பாரதிக்கு ஷாக் கொடுக்கிறார். ஏற்கனவே ஒருமுறை லட்சுமி கண்ணில் பாரதியும் கண்ணம்மாவும் இருக்கும் புகைப்படம் ஒன்று தென்பட்டுவிடும். ஆனால் கண்ணம்மா அதனை எப்படியோ சமாளித்துவிட்டார். தற்போது லட்சுமி, பாரதி மற்றும் கண்ணம்மாவின் திருமண புகைப்படத்தை பார்த்துவிடுவார் எனவும், அனைத்து உண்மைகளையும் சௌந்தர்யா லட்சுமியிடம் கூறிவிடுவார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.