விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ரோகித்திடம் உண்மையை கூறிய வெண்பா!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - ரோகித்திடம் உண்மையை கூறிய வெண்பா!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - ரோகித்திடம் உண்மையை கூறிய வெண்பா!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ரோகித்திடம் உண்மையை கூறிய வெண்பா!

தற்போது வெண்பாவிற்க்காக ஷர்மிளா ரோஹித் என்னும் மாப்பிள்ளையை பார்த்து இருக்கிறார். திருமணத்தை நிறுத்த ரோஹித்திடம் பாரதியை காதலித்த விஷயத்திலிருந்து அனைத்தையும் கூறும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா தொடரில் பாரதியிடம் இருந்து வெண்பாவை பிரித்து வெண்பாவிற்கு எப்படியாவது வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்று ஷர்மிளா பிளான் செய்து கொண்டிருக்கிறார். வெண்பாவிற்கு அடுக்கடுக்காய் சர்மிளா மாப்பிள்ளை பார்த்தாலும் ஏதோ ஒரு காரணம் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டே இருக்கிறார் அல்லது மாப்பிளைக்கு வெண்பாவை பிடித்து விட்டாலும் கூட அந்த மாப்பிள்ளையை ஏதோ ஒன்று செய்து ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்.

விஜய் டிவி ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் கேப்ரில்லா யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

இந்நிலையில் வெண்பாவிற்கு மாப்பிள்ளையாக சீரியலில் புதிதாக ஒரு கதாபாத்திரம் அறிமுகமாகியுள்ளது. அதாவது ரவுடிகள் வெண்பாவிடம் பிரச்சனை செய்து கொண்டிருக்கும் போது சரியாக ஒரு ஹீரோ அங்க வந்து ரவுடிகளிடம் சண்டை போட்டு வெண்பாவை காப்பாற்றுகிறார். வெண்பாவிற்கு உதவி செய்ததால் வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைக்கலாம் என வெண்பா அவரைக் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு செல்கிறார். வீட்டிற்கு சென்ற பிறகு தான் வெண்பாவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதாவது ஷர்மிளா இவர் தான் உனக்கு பார்த்த மாப்பிள்ளை என கூறி வெண்பாவிற்கு ஷாக் கொடுக்கிறார்.

Exams Daily Mobile App Download

ரோஹித்க்கும் வெண்பாவை மிகவும் பிடித்துவிட்டது. எப்படியாவது திருமணத்தை நிறுத்தியே தீரவேண்டும் என ரோஹித்தை பீச் பக்கமாக அழைத்துச் செல்கிறார். பாரதியை காதலித்த விஷயத்திலிருந்து பாரதிக்காக மட்டும்தான் இத்தனை ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் காத்துக் கொண்டிருக்கிறேன் என அனைத்து உண்மையையும் கூறுகிறார். அதனைக் கேட்ட ரோகித் முதலில் உன்னை பார்த்த உடனே எனது மனைவி என்று நினைத்தேன். தற்போது நீ கூறியது கேட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது என கவலைப்படுவது போல் செய்கிறார். பின், வெண்பா இவரையும் எளிதாக விரட்டிவிடலாம் என சிந்திக்கும் நேரத்தில் ரோஹித் நக்கலாக சிரிக்கிறார். ரோஹித்தை தான் வெண்பா திருமணம் செய்து கொள்வாரோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!