கண்ணம்மா தான் ஹேமாவின் அம்மா, உண்மையை அறிந்து கொண்ட பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் எபிசோட் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதனை கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
“பாரதி கண்ணம்மா” சீரியல்
விஜய் டிவியில் தற்போது டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் தற்போது முக்கிய கட்டமாக கண்ணம்மாவிற்கு வெண்பா ஊசி செலுத்தியதால் தாக்கம் ஏற்படுகிறது. இதனால் கண்ணம்மா மருத்துவமனைக்கு செல்கிறார். அப்போது கண்ணம்மாவின் இரு குழந்தைகள் நன்றாக இருக்கின்றவா? என்று மருத்துவர் கேட்கிறார். இதனால் அதிர்ச்சி அடையும் கண்ணம்மா தனக்கு இரு குழந்தைகள் பிறந்ததா? என்றும் அதில் ஒரு குழந்தையினை எங்கே? யார் என்னிடம் இருந்து பிரித்தது? என்று சௌந்தர்யாவை சரமாரியாக கேள்வி கேட்கிறார்.
தி எம்பயர்’ தொடருக்கு வலுக்கும் எதிர்ப்பு – ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #Uninstall Hotstar!
இதனை அடுத்து சீரியல் தற்போது பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணம்மாவிற்கு இரு குழந்தைகள் பிறந்தது தெரியாததை போலவே பாரதி, ஹேமா மற்றும் லட்சுமி மூவருக்குமே தெரியாது. இதனால் அடுத்து அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது அதற்கான தகவல் வெளியாகி உள்ளது.
TN Job “FB Group” Join Now
அது என்னவென்றால் அடுத்து வரும் எபிசோட்களில் கண்ணம்மாவிற்கு எப்படி தனக்கு இரு குழந்தைகள் இருந்தது தெரிய வந்ததோ, அதே போல் ஹேமாவிற்கு தான் கண்ணம்மாவின் குழந்தை என்று கூடிய விரைவில் தெரிய வரப்போகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்து விடும் ஹேமா அதனை லட்சுமியிடம் பகிர்ந்து கொள்வாராம். அப்போது இவர்கள் பேசுவதை பாரதி கேட்க இருக்கிறார். இதனால் இந்த சீரியலின் அடுத்த திருப்பம் வர இருக்கிறது.