விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது மக்கள் எதிர்பார்த்து வந்த சில முக்கியமான திருப்பங்கள் நடைபெற்று வருவதால், இந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் எழ தொடங்கியது.
பாரதி கண்ணம்மா
மக்களின் மனம் கவர்ந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சுமார் 690 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இத்தொடரில் 10 ஆண்டுகளாக பிரிந்து இருந்த பாரதியும், கண்ணம்மாவும் தற்போது கட்டாயத்தின் பேரில் மீண்டுமாக ஒன்றாக சேர்ந்து வசித்து வருகின்றனர். இதற்கிடையில் கண்ணம்மாவின் நடவடிக்கை பாரதிக்குள் சில மாற்றங்களை ஏற்படுத்த, சாமியாரின் பேச்சு, கோவிலில் நடைபெற்ற சம்பவம் என ஒரு சேர கண்ணம்மா மீதுள்ள உண்மையை வெளிப்படுகிறது. இதனை சற்றே நிதானிக்க துவங்கி இருக்கிறார் பாரதி.
“நாம் இருவர் நமக்கு இருவர் 2” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிக் பாஸ் ராஜு – அவரே சொன்ன விளக்கம்!
இதற்கிடையில் பாரதி, கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ விரும்புவதை தெரிந்து கொள்ளும் வெண்பா இத்தனை நாள் பட்ட கஷ்டம் எல்லாம் வீண் தானா என்று புலம்பி கொண்டிருக்கிறார். இப்படி இருக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் சில எதிர்பாராத சம்பவங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. அதாவது, கடந்த ஒரு சில எபிசோடுகளுக்கு முன்னால் கண்ணம்மா, பாரதியை பற்றி பக்கம் பக்கமாக பேசிய வசனத்தை எண்ணி மனம் திருந்தும் பாரதி, கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ள சம்மதிக்கிறார்.
உடனே பாரதி, கண்ணம்மாவின் திருமண நாளன்று கண்ணம்மாவை கோவிலுக்கு கூட்டி செல்லும் பாரதி, அன்னதானம் செய்கிறார். பிறகு சௌந்தர்யா வீட்டுக்கு இருவரும் கை கோர்த்தபடி நடந்து வருகின்றனர். தொடர்ந்து இருவரும் ஒன்றாக சேர்ந்து பூஜை செய்தவுடன், கண்ணம்மா மீதுள்ள தனது காதலை வெளிப்படுத்துகிறார் பாரதி. மேலும் கண்ணம்மாவை தனக்கு மனைவியாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் பாரதி பேசுகிறார்.
தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்யும் வெண்பா, அதிர்ச்சியில் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இப்போது இந்த காட்சிகளை கண்ட ரசிகர்கள் பாரதி, கண்ணம்மா இருவரும் ஒன்றாக சேர்ந்து விட்டார்கள் என்றால் சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர். என்றாலும் இந்த சீரியலில் இன்னும் DNA டெஸ்ட் எடுக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி என்பதால் அதுவும் விரைவில் நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ள பாரதி ஒரு நிபந்தனை விதிக்கப் போகிறார். அதனை பொறுத்து தான் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முடிவுக்கு வருமா, இல்லையா என்று தெரியும் என்பது கவனிக்கத்தக்கது.