“நாம் இருவர் நமக்கு இருவர் 2” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிக் பாஸ் ராஜு – அவரே சொன்ன விளக்கம்!
விஜய் டிவி “நாம் இருவர் நமக்கு இருவர் 2” சீரியலில் கதாநாயகனின் நண்பனாக கத்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராஜு தற்போது பிக் பாஸ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுப்பது குறித்து ரசிகர்கள் கேள்விக்கு விளக்கம் அளித்து இருக்கிறார்.
பிக்பாஸ் ராஜு:
விஜய் டிவியில் பிரபலமான சீரியலில் ஒன்றாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக மிர்ச்சி செந்தில் நடித்து வருகிறார். மேலும் அவருக்கு நண்பராக சீரியல் கதைக்கு காரணமாக கத்தி கதாபாத்திரத்தில் நடிகர் ராஜு நடித்து வந்தார். ஆனால் அவருக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்பு கிடைத்ததால் அவர் சீரியலில் இருந்து விலகாமல் கதையில் மாற்றம் செய்யப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சீரியலில் அவர் வெளிநாடு செல்வது போல காட்டப்பட்டுள்ளது.
தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்யும் வெண்பா, அதிர்ச்சியில் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய பக்குவமான நடிப்பால் அவர் மக்கள் மனதில் பெரிதும் இடம் பிடித்தார். மேலும் தன்னுடைய நகைச்சுவை குணத்தால் அடிக்கடி சில சேட்டைகளை செய்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகினார். எவ்வளவு வெறுப்பேத்தினாலும் கோவமே படாமல் இருக்க அது மக்களுக்கு பிடித்து போய் வாக்குகளை குவித்து அவரை வெற்றியாளராக மாற்றினார்கள். அவர் பிக்பாஸ் டைட்டில் உடன் ரூ.50 லட்சத்துடன் கடந்த வாரம் வெளியேறினார்.
அதனை தொடர்ந்து அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் வருவதால் மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் கத்தியாக ரீஎன்ட்ரி கொடுப்பாரா என ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கேள்வி எழுந்தது. இது பற்றி சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் காயத்ரி கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு அவர் கூறுகையில் சீரியலில் நடிக்க கண்டிப்பாக வருகிறேன். ஆனால் நான் வரும் சீன்களை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ஸ்ஸில் ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும் என நக்கலுடன் கலாய்த்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நான் மட்டும் இதை முடிவு செய்தால் முடியாது. சீரியல் அணியினரும் எனக்காக கதை எழுதினால் நான் கண்டிப்பாக சீரியலில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.