‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி? ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் இதில் கலந்து கொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி
மக்களின் பேராதரவுடன் கடந்த 2 சீசன்களாக மாபெரும் வெற்றியடைந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 3ம் பாகம் விரைவில் வெளியாகஇருக்கிறது. விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘குக் வித் கோமாளி’ மக்களிடம் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று வந்தது. குறிப்பாக ஒரு குக்கிங் நிகழ்ச்சியை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள், இளைஞர்கள் வரையுள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்ட ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உருவாகி இருக்கிறது.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை? பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை!
அந்த வகையில் விரைவில் 3ம் பாகமாக ஒளிபரப்பாக இருக்கும் இந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் விவரங்கள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இது குறித்து சமூக வலைதளங்களில் வெளியான தகவலின் படி, நடிகை ஊர்வசி, மனோபாலா, கானா பாலா, நந்தன், விஜி ஆகியோரின் பெயர்கள் சொல்லப்படுகிறது. தவிர கோமாளியிலும் புதிதாக பரத், மூக்குத்தி முருகன் ஆகியோர் இணைந்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
இப்போது விஜய் டிவி சீரியல் ரசிகர்களுக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக ‘குக் வித் கோமாளி’ ஷோவில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் கண்ணம்மாவாக நடித்து மக்களை மகிழ்வித்து வந்த நடிகை ரோஷினி சமீபத்தில் இந்த சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில் இவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக வெளியான செய்திகள் அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.