‘பாரதி கண்ணம்மா’ ரோஷினியின் இன்ஸ்டா பதிவு – ‘மிஸ் யூ கண்ணம்மா’! ரசிகர்கள் உருக்கம்!
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதில் கண்ணம்மாவாக பதிந்து விட்ட ரோஷினியின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றிற்கு ரசிகர்கள் உருக்கத்துடன் கமெண்ட் செய்துள்ளனர். இது சீரியலை விட்டு விலகிய பின்னர் ரோஷினியின் முதல் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஷினியின் பதிவு:
சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்களின் மனதில் கதாபாத்திரமாகவே பதிந்து விட்ட நடிகர், நடிகைகள் அதிக அளவில் உள்ளனர். அவர்களின் நிஜ பெயரை விட கதாபாத்திரங்களின் பெயரை வைத்து அழைக்கும் அளவிற்கு புகழ் பெற்ற கதாபாத்திரங்கள் சின்னத்திரை வரலாற்றில் பல உள்ளது. அந்த வரிசையில் தற்போது தவிர்க்க முடியாத இடத்தில் உள்ள கதாபாத்திரம் தான் கண்ணம்மா. விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கதையின் நாயகியான கண்ணம்மா மிகவும் துணிச்சலான பெண்ணாக இருக்கும் படி கதையில் காட்சிகள் வரும்.
‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினா வெளியிட்ட குழந்தையின் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
மிகவும் பாசமான பெண்ணாக இருக்கும் கண்ணம்மா, தன்னை காதலித்து திருமணம் செய்த கணவர் தன்னை பற்றி சந்தேகமாக பேசியதற்காக கணவரையும், கணவர் குடும்பத்தையும் விட்டு தனியாக வந்து தன் சொந்த காலில் நின்று வாழ்க்கையை வாழ்ந்து வரும் தைரியம் மிக்க பெண்ணாக இருப்பார். இந்த கதையில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்பிரியன் நடித்து வந்தார். கண்ணம்மா என்றவுடன் நம் அனைவரின் நினைவிற்கு வரும் முகம் அவர் மட்டும் தான். ஆனால் ரோஷினி வெள்ளித்திரை வாய்ப்புகள் கிடைத்திருப்பதால் தொடரை விட்டு விலகுவதாக அறிவித்து விட்டு சென்றுள்ளார்.
Vijay TV Bigg Boss 5 Promo | அபிநய், தாமரைக்கு இடையே வெடித்த பயங்கர மோதல்! ரசிகர்கள் ஷாக்!
இவருக்கு பதிலாக தற்போது வினுஷா என்பவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடரை விட்டு விலகிய பின்னர் ரோஷினி தனது நிலை குறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதன்பிறகு, புதிய பதிவுகள் ஏதும் இல்லை. இந்நிலையில், தொடரை விட்டு விலகி 3 வாரங்கள் கழிந்த பிறகு தற்போது புதிதாக தனது போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, “வாழ்க்கை எளிதாகவோ அல்லது மன்னிக்கக்கூடியதாகவோ இல்லை, நாம் வலிமையடைய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘மிஸ் யூ கண்ணம்மா’ என்றும், மீண்டும் சீரியலில் நடிக்கும் படியும் உருக்கத்துடன் கமெண்ட் செய்துள்ளனர்.