நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் களமிறங்கும் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி? ப்ரோமோ வெளியீடு!
விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் 3ம் பாகத்தில் நடிகர் செந்திலுடன் இணைந்து ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை ரோஷினி
பொதுவாக டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடிக்கும் சீரியல்கள் மட்டும் தான் அடுத்தடுத்த பாகங்களாக ஒளிபரப்பாவது வழக்கம். அந்த வகையில் டிவி சீரியல்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் ராஜா ராணி, சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களின் 2ம் பாகங்கள் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நடிகர் செந்திலின் இரட்டை வேடங்களுடன் முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் தற்போது வெளியாகி வருகிறது.
‘ராஜா ராணி 2’ சந்தியாவாக சவால்களை சந்திக்கும் செம்பருத்தி ஷபானா? அதிரடி ப்ரோமோ ரிலீஸ்!
இந்த சீரியலில் நடிகர் செந்திலுடன், நடிகை மோனிஷா, காயத்ரி, வைஷ்ணவி, ஜனனி ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்போது நடிகர் ராஜு ‘பிக் பாஸ்’ போட்டியில் கலந்து கொண்டு வர ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் மஹா நினைவிழந்திருப்பதாகவும் அவரை மாயன் சரி செய்ய முயற்சிப்பது போல சில ஸ்வாரசியமான கதைக்களம் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் 3ம் பாகம் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ கணவர், மனைவி – ரசிகர்கள் உற்சாகம்!
அதாவது, மாயன் மற்றும் அரவிந்த் கதாப்பாத்திரத்தில் நடிகர் செந்தில் நடிக்க இருப்பதாகவும், ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பிரபலம் நடிகை ரோஷினி ஹரிப்ரியன், தேவி மற்றும் தாமரை என்ற வித்தியாசமான இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்க இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகிய நடிகை ரோஷினி ஹரிப்ரியன் மீண்டும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் 3ம் பாகத்தில் நடிக்க இருப்பதாக வெளியான ப்ரோமோ ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.