சென்னை மழை வெள்ளத்தில் சிக்கிய ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அருண் பிரசாத் – ரசிகர்கள் ஷாக்!
தற்போது சென்னையில் கனத்த மழை பெய்து வரும் சூழலில் ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு திரும்பிய நடிகர் அருண் பிரசாத், மழையில் மாட்டிகொண்டவாறு வெளியிட்ட புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அருண்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்க கூடிய ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது சில புதிய திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த சீரியலில் கடந்த சில வாங்களாக பாரதி, கண்ணம்மா சம்பந்தப்பட்ட ரொமான்டிக் காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வந்தது. இதற்கிடையில் கண்ணம்மாவின் சூழ்ச்சியினால் ஜெயிலில் அடைக்கப்பட்ட வெண்பா, வெளியே வர இந்த சீரியலின் கதைக்களம் இன்னும் விறுவிறுப்பை கூட்டியுள்ளது.
Vijay TV Bigg Boss 5 Promo | கொட்டும் மழையில் விளையாடும் அமீர், சிபி! ரசிகர்கள் உற்சாகம்!
தவிர பாரதியிடம் இருந்து கண்ணம்மாவை பிரிக்க, அவருக்கு எதிராக சதி திட்டம் தீட்டி வரும் வெண்பா அடுத்தடுத்த எபிசோடுகளில் என்னவெல்லாம் செய்யவிருக்கிறார் என்பது ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பாரதி என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அருண் பிரசாத் மழையில் மாட்டி கொண்டதை போல வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது சென்னையில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4, 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், நேற்று கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது. இந்த கனமழையால் சென்னையின் பல்வேறு இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நெரிசலில் சிக்கி கொண்ட ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் அருண் பிரசாத், அதனை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் பதிவிட அந்த பதிவு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.