‘ஹேமா கண்ணம்மாவின் குழந்தை தான்’ உண்மையை கூறிய ஆட்டோ அண்ணா – அடுத்த திருப்பம்!
தற்போதைய சின்னத்திரை நிலவரப்படி பாரதி கண்ணம்மா தொடர் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது. யாருக்குமே தெரியாத ரகசியங்கள் தெரிய வரும் காட்சிகள் சீரியலில் வர இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
கண்ணம்மா தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் இன்னொரு குழந்தை யார் என்பதை தேடுவதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார். இது பற்றி அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் சௌந்தர்யாவிடம் ஒவ்வொரு முறை கேட்க முயற்சி செய்யும் போதும் அவர் தப்பி விடுகிறார். இது பற்றி கண்ணம்மா அஞ்சலியிடம் கால் பண்ணி கேட்கிறார். அப்போது, அஞ்சலி கண்ணம்மாவிற்கு குழந்தை பிறந்த நாளில் சௌந்தர்யா ஆசிரமத்தில் இருந்து ஹேமாவை கொண்டு வந்ததை சொல்கிறாள். ஏற்கனேவே குழப்பத்தில் இருந்த கண்ணம்மா இதை கேட்டவுடன் இன்னும் குழப்பத்தில் ஆழ்கிறாள்.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” முதல், சன் டிவி “ரோஜா” சீரியல் வரை – டாப் கமெண்ட்கள்!
இது பற்றி துளசியிடம் கேட்பதற்காக கண்ணம்மா ஹாஸ்பிட்டல் செல்கிறாள். ஆனால் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறந்த விஷயம் தெரிந்து விட்டது என்று சௌந்தர்யா துளசியிடம் எச்சரித்து விட்டு சென்றுள்ளார். இது பற்றி கண்ணம்மாவிடம் சொல்லக் கூடாது என்றும் துளசியிடம் சத்தியம் வாங்கி செல்கிறார் சௌந்தர்யா. இதனால் கண்ணம்மா கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் துளசி அமைதியா தெரியாது என்று சொல்லி விடுகிறார். மேலும், சௌந்தர்யா துளசியிடம் ரகசியமாக பேசிக் கொண்டிருந்ததை பாரதி வந்து வெண்பாவிடம் சொல்கிறார்.
மற்றொரு புறம் அஞ்சலியுடன் கைரேகை பார்ப்பவர் பேசிக் கொண்டிருப்பதை போல் காட்சிகள் உள்ளது. அவர் அஞ்சலியின் வாழ்வில் நடந்தது போலவே அத்தனை விஷயங்களையும் போட்டு உடைக்கிறார். அப்போது, அகில் வந்து அவரை அனுப்பி விடுகிறார். ஏற்கனேவே குழப்பத்தில் இதை கேட்டு குழப்பிக்காத என்று அஞ்சலியுடன் அகில் சொல்கிறார். கண்ணம்மா வீட்டில் யோசனையுடன் இருக்கும் போது, லட்சுமியை தினமும் பள்ளியில் விடும் பக்கத்து வீட்டில் இருக்கும் ஆட்டோ அண்ணா ராஜா அங்கு வருகிறார்.
சிம்புவின் “மாநாடு” திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் – அண்ணாத்த உடன் மோதல்!
அவர், பாரதி தான் லட்சுயின் அப்பா, சவுந்தர்யா குடும்பம் தான் கண்ணம்மாவின் சொந்தக்காரர்கள் என அனைத்தும் தெரிந்தது போலவே சொல்கிறார். கூடவே, “ஹேமா கண்டிப்பாக உன் குழந்தை தான்.. முகத்தை பார்த்தாலே தெரியுது” ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த கண்ணம்மாவுக்கு மேலும் சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. ‘ஹேமா நம்ம குழந்தையா இருப்பாலா” அப்டினு கண்ணம்மா யோசிக்க ஆரம்பிக்கிறார். யாருக்கும் தெரியாத விஷயங்கள் ஆட்டோ அண்ணாவிற்கு மட்டும் எப்படி தெரிந்தது என்று இனி தான் ,தெரிய வரும்.