அகிலன் பேச்சை மீறி அஞ்சலி செய்யும் காரியம் – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் தற்போது அடுத்து நடக்கவிருக்கும் எபிசோட் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
“பாரதி கண்ணம்மா” சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான். இந்த சீரியலில் தற்போது முக்கிய கட்டமாக கண்ணம்மாவிற்கு தனது இரண்டாவது குழந்தை பற்றி தெரிய வருகிறது. இதனால் அது குறித்து அவர் சௌந்தர்யாவிடம் கேட்கிறார். ஆனால், சௌந்தர்யா மழுப்பி விடுவதால், வெண்பாவிடம் சென்று உண்மையை கேட்கிறார். வெண்பாவிற்கு உண்மை தெரியாமல் இருந்தாலும், கண்ணம்மாவை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கண்ணம்மாவை நன்றாக கெஞ்ச விடுகிறார்.
1 முதல் 5ம் வகுப்பு வரை செப்.21ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
பாரதி மனைவி என்று தன்னை கூப்பிட்டால் மட்டும் தான் உண்மையை கூறுவேன் என்றும் சொல்லி மிரட்டுகிறார். இதனால் நொந்து போகும் கண்ணம்மா தனது இரண்டாவது குழந்தையை நினைத்து மிகவும் வருந்துகிறார். அப்போது சௌந்தர்யா வரவும், கண்ணம்மா அவரிடம் கத்தி விடுகிறார். தன்னை நிம்மதியாக வாழ விட வேண்டும் என்றும், சௌந்தர்யா தனது மகனுடன் சந்தோசமாக இருப்பதாகவும் தான் மட்டும் தான் இப்படி கஷ்டப்படுகிறேன் என்று கூறுகிறார்.
இன்ஸ்டாகிராம் மூலம் இளம் பெண்களுக்கு ஆபத்து – அதிர்ச்சியளிக்கும் அதிகாரபூர்வ தகவல்!
இதனை கேட்டு சௌந்தர்யாவிற்கு என்னவோ போல் ஆகி விடுகிறது. தனது கணவர் வேணுவிடம் கூறி வருந்துகிறார். இது ஒரு புறம் இருக்க, அஞ்சலி குறி சொல்லுபவர் பேச்சை கேட்டு பரிகாரம் செய்கிறார், தனக்கு நன்றாக குழந்தை பிறக்க வேண்டும் என்றும் கடவுளிடம் வேண்டுகிறார். முதலில், இதற்கு மறுக்கும் அகிலன் பின்னர் சரி என்று கூறி அஞ்சலியுடன் பரிகாரம் செய்கிறார். அஞ்சலி பரிகாரம் செய்வதால் நன்றாக குழந்தை பிறக்குமா? அவர் உயிர் பிழைத்து விடுவாரா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.