இந்தியாவில் நவம்பர் 19 ஸ்தம்பிக்கும் வங்கி பணிகள்.. ஸ்ட்ரைக் அறிவிப்பு – UFBU இந்தியா அமைப்பு ஆதரவு!
நாடு முழுவதும் வரும் 19ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் வங்கி வேலைகள் மற்றும் பண பரிவர்த்தனை சேவைகள் பாதிப்படைவதற்கான வாய்ப்புள்ளது.
வேலை நிறுத்தம்:
இந்தியாவில் வங்கிகள் தினசரி அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. என்னதான் நாம் பண பரிவர்தனைகளை முழுமையாக ஆன்லைன் மூலமாக செய்து வந்தாலும் சில முக்கிய வேலைகளுக்கு நாம் நேரடியாக வங்கிக்கு தான் செல்ல வேண்டும். அரசு விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய உள்ளூர் விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை, 2,4ம் சனிக்கிழமைகள் விடுமுறைகள் தவிர மற்ற அனைத்து நாட்களும் இந்தியா முழுவதும் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் வரும் 19ம் தேதி வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். வங்கி ஊழியர்கள் பணியிட மாற்றம், விதி மீறல், இழப்பீடு தொகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வரும் 19ம் தேதி வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்திற்கு தற்போது யுனைடெட் போரம் அமைப்பு (United Forum of Bank Unions) ஆதரவு தெரிவித்துள்ளது.
மக்களே எச்சரிக்கையாக இருங்க…சென்னையில் அதிகரித்து வரும் ‘மெட்ராஸ் ஐ’ – வெளியான அதிர்ச்சி தகவல்!!
Exams Daily Mobile App Download
வரும் 19ம் தேதி இந்த மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை அன்றைய தினம் வங்கியின் வழக்கமான வேலை நாள் அன்று வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும். அதேபோல், ஏடிஎம் பயன்பாடுகளும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.