மக்களே எச்சரிக்கையாக இருங்க…சென்னையில் அதிகரித்து வரும் ‘மெட்ராஸ் ஐ’ – வெளியான அதிர்ச்சி தகவல்!!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ‘மெட்ராஸ் ஐ’ கண்நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் தினசரி பாதிப்பு 5 ஆக இருந்த நிலையில் தற்போது அதிரடியாக உயர்ந்துள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.
மெட்ராஸ் ஐ
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெண்படல சுழற்சி எனப்படும் ‘மெட்ராஸ் ஐ’ கண் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் காற்று மூலமாகவும், மாசு மூலமாகவும் வேகமாக பரவக் கூடியது. அதனால் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவர்களும் இந்நோயால் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல், வெளிச்சத்தை பார்க்கும் போது கண் கூசுதல் உள்ளிட்ட மெட்ராஸ் ஐ-யின் அறிகுறிகள் ஏதேனும் உங்களிடம் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மெட்ராஸ்-ஐ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – தரவரிசை பட்டியல் வெளியீடு!
Exams Daily Mobile App Download
சென்னையில் கடந்த வாரத்தில் எழும்பூர் மருத்துவமனைக்கு தினசரி 5 பேர் மெட்ராஸ் ஐ -ஆல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் தற்போது 50 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து மற்ற தனியார் மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.