Bank Strike: பொது மக்களே கவனம்.. இந்த நாட்களில் வங்கிகளுக்கு செல்லாதிங்க – வேலை நிறுத்தம் அறிவிப்பு!
வரும் ஜனவரி 30 மற்றும் 31ம் தேதிகளில் வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேலை நிறுத்தம்:
இந்திய வங்கி ஊழியர்கள் பல ஆண்டு காலமாக தங்களின் கோரிக்கைளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளின் ஒன்றுபட்ட அமைப்பான United Forum of Bank Union, தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
நடப்பு நிகழ்வுகள் – 13 ஜனவரி 2023 | 13th January 2023 Current Affairs!
தேசிய ஓய்வூதிய முறையை ரத்து செய்வது, ஒரு வாரத்தில் ஐந்து தினங்கள் மட்டுமே வேலை, ஓய்வூதியம் புதுப்பித்தல், சம்பள உயர்வு கோரிக்கையை ஏற்பது, புது வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (India Bank Association) பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளார்.
எனவே ஜனவரி 30 மற்றும் 31ம் தேதிகளில் வங்கி செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் தங்கள் வங்கி சம்மந்தப்பட்ட வேலைகளை முன்பே முடித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.