வங்கியில் நிறைய பணத்தை டெபாசிட் செய்பவர்கள் கவனத்திற்கு – ஆபத்தா? நல்லதா?
வங்கியில் அதிக பணத்தை டெபாசிட் செய்வது குறித்து வாடிக்கையாளர்களுக்கு பெரும் குழப்பம் நிலவுகிறது. பணம் பாதுகாப்பாக இருக்குமா? என்ற அச்சமும் எழுகிறது. வைப்புத்தொகை தொடர்பாக வங்கியின் விதிகள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
வைப்புத்தொகை:
இந்தியாவில் வங்கி சேவை என்பது அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாக உள்ளது. வங்கிகள் மூலம் மக்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்து வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் அனைவருக்குமே வங்கியில் தனிப்பட்ட கணக்கு உள்ளது. பெரும்பாலும் பண பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் வங்கியில் அதிக பணத்தை டெபாசிட் செய்வது குறித்து வாடிக்கையாளர்களுக்கு பெரும் குழப்பம் நிலவுகிறது. வங்கியில் ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யக்கூடாது என்று நினைக்கின்றனர்.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
வங்கி திவாலாகினாலோ ஐந்து லட்சம் ரூபாய் வரை பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. சிக்கலில் உள்ள வங்கி திவாலாக அரசு அனுமதி வழங்காது சிக்கலில் இருக்கும் வங்கியை மற்றொரு வங்கியுடன் இணைக்கப்படும். அதனால் வாடிக்கையாளர்கள் அச்சப்பட தேவையில்லை ஒரு வங்கி செயலிழந்தால், அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பணம் செலுத்துவதற்கு DICGC பொறுப்பு ஏற்றுக் கொள்கிறது. இதற்காக, DICGC வங்கிகளிடமிருந்து காப்பீட்டு பிரீமியத்தை வசூலிக்கிறது.
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி – தன்னார்வலர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு!
உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் வரையறை கிடையாது .உங்கள் பணத்திற்கு உரிய வருமான ஆவணங்கள் இருக்க வேண்டும். வருமான வரித்துறையினர் விசாரித்தால் உரிய காரணங்களை தெரிவிக்க வேண்டும். விதிகளின்படி வரி செலுத்தினால், சரியான வருமானச் சான்று இருந்தால் வங்கியில் இருக்கும் உங்கள் தொகைக்கு எவ்வித பிரச்னையும் இருக்காது.