பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 42 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியாவில் பாங்க் ஆப் பரோடா வங்கியில் ஃ ப்ராடு ரிஸ்க் மற்றும் ரிஸ்க் மேனேஜ்மென்ட் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பாங்க் ஆஃப் பரோடா:
இந்தியாவில் கொரோனா அலை தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் வேலை வாய்ப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. மக்கள் பலரும் தங்களின் வேலையை தேடி அலைந்து வருகின்றனர். இந்த நேரத்தில் மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன்வந்துள்ளனர். அந்த வகையில் தற்போது அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. மேலும் போட்டி தேர்வுகள் குறித்தும் தகவல்கள் வந்துள்ளது. அந்த வகையில் தற்போது வங்கி துறையில் காலிப்பணியிடங்களை அறிவித்து வருகிறது.
மற்ற வங்கிகளை தொடர்ந்து பாங்க் ஆஃப் பரோடா ஃப்ராடு ரிஸ்க் மற்றும் ரிஸ்க் மேனேஜ்மென்ட் துறைகளில் காலியாக உள்ள 42 காலிப்பணியிடங்களுக்கு முழு நேரம் / ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்க முடிவு செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 23 முதல் இப்பணியிடத்திற்கான விண்ணப்பதிவு தொடங்கியுள்ளது. bankofbaroda.in மூலம் விருப்பமுள்ளவர்கள் மார்ச் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ரூ. 600 கட்டணம் செலுத்த வேண்டும். SC/ST/PWD பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
மார்ச் 5, 6ம் தேதிகளில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் – ஆளுநரின் முக்கிய அறிவிப்பு!
மேலும் விண்ணப்பதாரர்கள் பட்டய கணக்காளர் (CA) கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். அதனை தொடர்ந்து இடர் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்தார் B.E இல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தரவு அறிவியலில் பி.டெக் அல்லது கணிதம் அல்லது புள்ளியியல் பட்டப்படிப்பு மற்றும் குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மோசடி இடர் ஆய்வாளர் மேலாண்மைத் துறை பணியிடத்திற்கு B. Tech/ B.E./ M. Tech/ M.E. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.