மார்ச் 5, 6ம் தேதிகளில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் – ஆளுநரின் முக்கிய அறிவிப்பு!

0
மார்ச் 5, 6ம் தேதிகளில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் - ஆளுநரின் முக்கிய அறிவிப்பு!
மார்ச் 5, 6ம் தேதிகளில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் - ஆளுநரின் முக்கிய அறிவிப்பு!
மார்ச் 5, 6ம் தேதிகளில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் – ஆளுநரின் முக்கிய அறிவிப்பு!

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏராளமானோர் தங்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். தற்போது தொற்று பரவல் குறைந்த நிலையில் புதுச்சேரியில் நிபுனா-சேவா என்ற சேவை நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக பொதுமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்தனர். அத்துடன் தனியார் துறையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்கள் வேலைகளை இழந்தனர். மேலும் அனைத்து தொழில்களிலும் பாதிப்பு ஏற்பட்டதால் வேலைவாய்ப்புகளும் குறைய தொடங்கியது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். தற்போது இந்திய முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளது.

TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மேலும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. அத்துடன் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்நது புதுச்சேரியில் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளதாக ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த முகாம் நிபுனா-சேவா என்ற சேவை நிறுவனம் சார்பில் வருகிற மார்ச் 5 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

TNPSC Group 2, 2A தேர்வு விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?

இதற்கு முன்னதாக இந்நிறுவனம் ஹைதராபாத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 1.10 லட்சம் போ் பங்கேற்றனர். இதில் 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இதேபோல் இந்நிறுவனம் புதுவையில் வேலைவாய்ப்பு முகாமை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அதன்படி 100 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வருகிற மார்ச் 5,6ம் தேதிகளில் தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலமாக 15 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை உருவாக்கப்படும் என்றும் புதுவை முதல்வர் அறிவித்துள்ளார். அதனால் வேலையில்லா இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!