இந்த வாரத்தில் 3 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் மே மாதத்தின் நடப்பு வாரத்தில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு அட்டவணையையும் இப்பதிவில் காணலாம்.
வங்கி விடுமுறை
ஆண்டின் ஐந்தாவது மாதமான மே மாதத்தில் பல்வேறு பண்டிகை காலங்கள் வருவதால் குறிப்பிட்ட சில நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இம்மாதம் சுமார் 11 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மூன்று நாட்களுக்கு மூடப்பட இருக்கிறது. எனவே, உங்களிடம் ஏதேனும் முக்கியமான வங்கி தொடர்பான வேலை இருந்தால், அதை விரைவில் முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Exams Daily Mobile App Download
இப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அறிவுறுத்தல்களின் படி, இந்தியாவில் உள்ள அனைத்து பொது, வணிக, வெளிநாட்டு, கூட்டுறவு மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிடப்பட்ட தேதிகளில் மூடப்பட்டிருக்க வேண்டும். இது தவிர குடியரசு தினம் (ஜனவரி 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) மற்றும் கிறிஸ்துமஸ் தினம் (டிசம்பர் 25) உட்பட குறிப்பிட்ட சில நாட்களுக்கு இந்தியா முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்றாலும் சில வங்கி விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.
வங்கி விடுமுறை:
மே 9 – ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மே 14 – இரண்டாவது சனிக்கிழமை என்பதால் இந்தியா முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
மே 15 – ஞாயிற்றுக்கிழமை
மே 22 – இந்தியா முழுவதும், வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
மே 28 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை காரணமாக, அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் மூடப்படும்.
மே 29 – ஞாயிற்றுக்கிழமை