வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – செர்ட்இன் வெளியீடு!
தற்போது தொழில்துறையில் அதிகப்படியான வளர்ச்சி ஏற்பட்டு வருவதன் காரணமாக இணைய வழியாக நூதன முறையில் திருட்டு நடைபெறுகிறது. அது குறித்து செர்ட்இன் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
செர்ட்இன் எச்சரிக்கை:
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் நூதன திருட்டுகளும் அதிகரித்து வருகிறது. தற்போது வங்கி விவரம் அனைத்தும் இணையவழி ஆனதால் அந்த விவரங்களை திருடும் வகையில், இணைய திருடர்கள் புதிய வகையில் மோசடி செய்து வருகின்றனர். அதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சைபர் பாதுகாப்பு அமைப்பான, ‘செர்ட்இன்’ வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. மேலும் பிஷ்ஷிங் எனும் இணைய மோசடி குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ரயில் பயணிகளே கவனியுங்கள் – கொரானோ நெகட்டிவ் சான்று அவசியம்!
இணைய திருடர்கள் வங்கி வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணிற்கு வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது என மெசேஜ் அனுப்புவார்கள். அதை தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் அதை கிளிக் செய்து உள்ளே சென்றதும் வங்கியின் இணையதளம் போன்ற போலி இணையதளம் இருக்கும். அதன் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கி குறித்த அனைத்து தகவல்களையும் இணைய திருடர்கள் சேகரிப்பார்கள்.
TN Job “FB Group” Join Now
அதனை பயன்படுத்தி அவர்களின் உண்மையான வங்கி கணக்கிற்கு சென்று பண மோசடி செய்வது தற்போது நடைபெறும் இணைய திருட்டு ஆகும். இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க வங்கி வாடிக்கையாளர்கள் மெசேஜ் வரும் இணைய இணைப்பின் இறுதியில் என்கிராக் என்ற வாசகம் உள்ளதா என சோதிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது போல் வரும் எந்த லிங்க்களையும் கிளிக் செய்யாமல் இருப்பதன் மூலம் இது போன்ற இணைய திருட்டை தடுக்கலாம் என மக்களுக்கு செர்ட்இன் எச்சரிக்கை விடுத்துள்ளது.