ரயில் பயணிகளே கவனியுங்கள் – கொரானோ நெகட்டிவ் சான்று அவசியம்!
கோவிட் பெருந்தொற்றின் காரணமாக ரயில் நிலைய பயணிகளிடம் கொரானோ தொற்று பாதிப்பு இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
நெகட்டிவ் சான்றிதழ்:
நாடு முழுவதும் கொரானோ பரவலின் இரண்டாம் அலையே முடிவுக்கு வராத நிலையில், தற்போது மூன்றாம் அலை ஆரம்பித்து விட்டதாக உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் ரயில் பயணங்களை மேற்கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நகரங்களில் சாதாரண ரயில்கள் இன்னும் இயக்கப்படவே இல்லை. பெருந்தொற்றின் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் அடிக்கடி வெளியிடப்படுகின்றன.
தமிழக அரசு வழங்கும் கொரோனா நிவாரணம் ரூ.4000 – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
இந்த நடவடிக்கைகளை பின்பற்றியே தற்போது நாடு முழுவதும் விரைவு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்ற அனைத்து நிலையான வழிமுறைகளும் பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடிக்கடி நடைமேடைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல் கைகளையும் சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ள கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தற்போது இதோடு சேர்த்து பயணிகள் கோவிட் பரிசோதனை செய்து, கொரானோ இல்லை என்ற சான்றிதழையும் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். கோவிட் மூன்றாம் அலை பரவல் குறித்த அச்சம் இருப்பதால் இந்த சான்றிதழை கொண்டு வருமாறு பயணிகள் கட்டாயப்படுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.