தமிழக அரசு வழங்கும் கொரோனா நிவாரணம் ரூ.4000 – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகையை முறையாக வழங்க வேண்டும். தமிழக அரசு இது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா நிவாரண நிதி:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. அதனால் ஏராளமான மக்கள் தங்கள் வேலைகளை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையை அறிந்து அரசு ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 வழங்கியது. மேலும் 14 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் வழங்கப்பட்டது.
தமிழக அரசு வழங்கும் ரூ.25 லட்சம் நிதியுதவி – அரசாணை வெளியீடு!
அதனை தொடர்ந்து ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூபாய் 133 கோடி வழங்க தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அதன் படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் உதவித்தொகையுடன் ரூபாய் 1000 வழங்கப்பட்டது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளர்களுக்கு முறையாக நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
TN Job “FB Group” Join Now
மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, 25 சதவீதம் கூடுதல் உதவியும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இதனை விசாரித்த நீதிபதி, மாற்றுத்திறனாளிகளுக்கான நிவாரண உதவிகள் உரிய முறையில் சென்றடைந்ததாக தெரியவில்லை. அவர்கள் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். தமிழக அரசு இது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.