அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் – இன்று முதல் தொடக்கம்!!
கர்நாடகா மாநிலத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் 10 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
வேலைநிறுத்தப் போராட்டம்:
கர்நாடகா மாநிலத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சில கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி 6வது ஊதியக்குழு பரிந்துரையின் படி சம்பளம் உயர்த்தி வழங்குதல், தங்களை அரசு ஊழியர்களாக கருத வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
TN Job “FB Group” Join Now
2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாத முடிவில் நடத்தப்பட்ட போராட்டத்தில் அரசு பேச்சுவார்த்தை நடத்திய போது தங்களை அரசு ஊழியர்களாக கருத வேண்டும் என்ற கோரிக்கையை தவிர மற்ற 9 கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என் எழுத்துப்பூர்வ வாக்குறுதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் அரசு தெரிவித்தது போல அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு அறிவிப்பு!!
எனவே அவர்கள் தெரிவித்த 10 கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் தற்போது இடைத்தேர்தல் காரணமாக நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த நேரத்தில் சம்பள உயர்வு குறித்து அறிவிக்க முடியாது எனவும், அதனால் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிஎஸ்இ செய்முறை தேர்வுகள் – நாளை முதல் தொடக்கம்!!
ஆனால் போக்குவரத்து துறையினர் அதற்கு செவிசாய்க்காமல் திட்டமிட்டபடி இன்று (ஏப்ரல் 7) முதல் காலவரையின்றி வேலைநிறுத்த போராட்டம் தொடங்கும் என தெரிவித்தனர். அதன்படி 25 ஆயிரம் பஸ்கள் டிப்போக்களில் நிறுத்தப்பட்டுள்ளன. வழக்கமாக பெங்களூரு மாநகராட்சியில் 7000 பஸ்கள் இயங்கும். அதில் 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். ஆனால் தற்போது பஸ்கள் இயங்காததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவலால் 144 தடை உத்தரவு அமல் – மாநகராட்சி அறிவிப்பு!!
இந்த நிலைமையை சமாளிக்க அரசு பல ஏற்பாடுகள் செய்துள்ளது. மற்ற பயிற்சி ஓட்டுனர்களை கொண்டு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் ஊழியர்கள் அனைவரும் இன்று கட்டாயம் பணிக்கு ஆஜராக வேண்டும். அவ்வாறு ஆஜராகாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.