ஐசிஎஸ்இ செய்முறை தேர்வுகள் – நாளை முதல் தொடக்கம்!!
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்திய பள்ளி சான்றிதழ் (ஐசிஎஸ்இ) மூலமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் நாளை முதல் தொடங்கப்பட உள்ளன.
செய்முறை தேர்வுகள்:
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்திய பள்ளி சான்றிதழ் (ஐசிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. கொரோனா காலத்தில் அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டாலும் ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் பள்ளிகளில் மாணவர்கள் சிறிய குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆய்வகங்களில் அனுமதிக்கப்படுவார்கள். முதல் தாளாக கணினி அறிவியல் (காகிதம் 2) காலை 9 மணி முதல் தொடங்கப்பட்டு 1.30 மணி நேரமாக நடைபெற உள்ளது. மேலும் மாணவர்கள் ஆய்வகங்களுக்குள் நுழையும் போது முகக்கவசம் அணிந்து வர வேண்டும் மற்றும் கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் ஏப்ரல் 9 முதல் இரவு ஊரடங்கு? புதிய விதிமுறைகள் அமல்படுத்த வாய்ப்பு!
மாணவர்கள் தேர்வு எழுத வரும் போது ஹால் டிக்கெட்களை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். அவர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு போன்றவற்றை வீட்டில் இருந்தே கொண்டு வர வேண்டும். தேர்வுக்கு தேவையான பொருள்களை தேர்வுக்கு செல்வதற்கு முன்பாக சரிபார்த்து கொள்ள வேண்டும்.
அரியர் தேர்வுகள் ரத்து வழக்கு – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!
மேலும், இயற்பியல், வேதியியல், உயிரியல், பயோடெக்னாலஜி, இந்திய இசை (இந்துஸ்தானி), பேஷன் டிசைனிங், உடற்கல்வி, கணினி அறிவியல் மற்றும் வீட்டு அறிவியல் ஆகிய பாடங்களின் நடைமுறை தேர்வுகளுக்கான தேதி மற்றும் நேரம், சம்பந்தப்பட்ட பள்ளியால் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் அந்த நாட்களில் தேர்வு எழுத கட்டாயம் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.