தமிழகத்தில் புத்தாண்டு அன்று பொதுமக்கள் கோவில்களுக்கு செல்ல தடை? அமைச்சர் விளக்கம்!
தமிழக அரசு 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில் கோயில்களில் வழிபடுவதற்கு தடை குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் விளக்கம்:
இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸின் தாக்கம் தீவிரமாக உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் ஓமைக்ரான் தொற்று கால் பதித்து சில மாவட்டங்களில் வேகமெடுத்து வருகிறது. கொரோனா தொற்று முற்றிலும் குறையாத பட்சத்தில் இந்த ஓமைக்ரான் வைரஸ் பரவலால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் நோய் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது. மேலும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் நாமினி நியமனம்! வழிமுறைகள் இதோ!
நேற்று புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு.சங்கர் அவர்கள் கட்டுப்பாடு நெறிமுறைகளை வெளியிட்டார். அதில் முக்கியமாக பொதுமக்கள் எந்த இடத்திலும் ஒன்று கூட கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பால் புத்தாண்டு அன்று மக்கள் கோவில்களுக்கு செல்லலாமா என்று கேள்வி எழுந்தது. இது குறித்து அமைச்சர் சேகர் பாபு சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக நடந்த சிறப்பு கூட்டத்தில் பேசினார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.5,000 – முக்கிய கோரிக்கை!
அவர் கூறுகையில், 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்ட நிலையில் கோயில்களில் வழிபடுவதற்கு தடை இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் தமிழக அரசு கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தினார். இந்த அறிவிப்பினால் புத்தாண்டு அன்று கோவில்களுக்கு செல்லும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.