தமிழக கோவில்களில் யாகங்கள் நடத்த தடை – ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் கோவில்களுக்குள் யாகங்கள் நடத்த அனுமதிக்க கூடாது எனவும் கோவிலுக்கு வெளியில் யாகங்கள் நடத்துவதற்கான கட்டுப்பாடுகளை பற்றி அறநிலையத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கோவில் யாகங்கள்:
தமிழகத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிரகாரத்தில் விரதம் இருக்கும் பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வெளியில் பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் இருப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளதை வரவேற்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
மேலும் நீதிபதிகள் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கோயிலுக்குள் யாகங்கள் நடத்த அனுமதிக்க கூடாது எனவும் யாகங்கள் கோயிலின் வெளியில் மட்டுமே நடைபெற வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இந்த கருத்தை இந்து அறநிலையத்துறை ஆணையர் தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து திருப்பதி கோவிலுக்குள் விரதம் இருப்பதற்கு அனுமதி கிடையாது. அதனால் தமிழக கோவிலுக்குள் பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி வழங்குவது சாத்தியமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா – வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.. மாநில கல்வித்துறை!
Follow our Instagram for more Latest Updates
தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைமுறைகள் கட்டுப்பாடுகளை அரசு விரைவில் அமலுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் இல்லையெனில் நீதிமன்றம் கட்டுப்பாடுகளை கொண்டுவரும் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோயிலில் பின்பற்றப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.