பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா – வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.. மாநில கல்வித்துறை!
மேற்கு வங்க மாநிலத்தில் தீபாவளி மற்றும் காளி பூஜை முடிவடைந்ததை அடுத்து தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அம்மாநில கல்வித் துறை தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பட்டமளிப்பு விழா:
இந்தியாவில் கல்லூரிகளில் படிப்பை முடித்த மாணவர்களுக்கு கல்லூரி மற்றும் பல்கலைக்ககத்தின் சார்பாக பட்டமளிப்பு விழா நடத்தப்படுவது வழக்கம். தற்போது பள்ளி மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழா நடத்தப்பட வேண்டும் என்றும் மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநில கல்வித்துறை தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு 13 அம்ச வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதில் ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு “பட்டமளிப்பு விழா” நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 2ம் தேதி அல்லது அதற்கு பிறகு “பட்டமளிப்பு விழா” நடத்த வேண்டும். அப்போது ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி அடைந்து செல்லும் மாணவர்களை அந்தந்த பள்ளி முதல்வர் கௌரவிப்பார். மேலும் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வகுப்பிற்கு வரவேற்க வேண்டும்.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
Follow our Instagram for more Latest Updates
பிறகு புதிதாக பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்கள் தங்களை சக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பள்ளியில் ஒவ்வொரு மாணவர்களின் புகைப்படங்களும் அதில் அவர்களின் பிறந்த தேதியும் இடம் பெற்று இருக்க வேண்டும். அதனை தொடர்ந்து மாணவர்களை இணைத்து குழு கற்றலை ஊக்குவிக்க வேண்டும். அத்துடன் மாணவர்கள் கல்வி கற்க ஆர்வத்தை தூண்டும் வகையில் வகுப்பறைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு ஆண்டின் பள்ளியின் முழு நிகழ்வு மற்றும் பாராட்டு விழா ஆகியவற்றை புத்தக வடிவில் வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.