தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட தடை – மாநகர காவல்துறை ஆலோசனை!
தமிழகத்தில் புத்தாண்டு பண்டிகையை ஹோட்டல், பண்ணை வீடு மற்றும் கடற்கரைகளில் கொண்டாட மாநகர காவல்த்துறை தடை விதித்துள்ளது. மேலும் இது குறித்து விரைவில் மாநகர காவல் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம்:
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதாவது இந்த புத்தாண்டு பண்டிகை பெரும்பாலானோர் கடற்கரை, நட்சத்திர ஹோட்டல் மற்றும் பண்ணை வீடு உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாடுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டது.
WIPRO நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள் – முக்கிய அறிவிப்பு!
அதனால் பொதுமக்கள் அனைவரும் கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டு பண்டிகை கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து இயல்புநிலை திருப்பி வருகிறது. இன்னும் சில நாட்களில் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு பண்டிகை கொண்டாட மக்கள் அனைவரும் ஆவலாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாக பரவி வரும் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று காரணமாக புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் DA அதிகரிப்பு? புத்தாண்டில் எதிர்பார்ப்பு!
இது குறித்து பண்ணை வீடு, நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுடன் ஆலோசனை நடத்த மாநகர காவல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள், நட்சத்திர ஓட்டல்கள், ரிசாட்டுகள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகளிலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது. ஓமைக்ரான் தொற்று அதிகரித்தால் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.