தமிழகத்தில் BLOOD ART நிறுவனங்களுக்கு தடை – மீறினால் நடவடிக்கை.. அமைச்சர் எச்சரிக்கை!
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரத்தத்தை எடுத்து ஓவியம் வரையும் Blood Art நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
நிறுவனங்களுக்கு தடை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருந்துகள் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக கொரோனா தொற்றால் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று கூறியுள்ளார். மேலும் கடந்த 20 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10க்கும் குறைவாக தான் உள்ளது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா விதிமுறைகள் ஏதும் விளக்கி கொள்ளப்படவில்லை.
Udaan, Ola, Oyo நிறுவனங்களில் சுமார் 18,000 பேர் பணி நீக்கம் – வெளியான ஷாக்கிங் நியூஸ்!!
Exams Daily Mobile App Download
எந்த வகை கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நமக்கு தெரியாது. அதனால் மக்கள் தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை காட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இரத்தத்தை எடுத்து ஓவியம் வரையும் Blood Art நிறுவனங்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.இதனை மீறி அந்த நிறுவனங்களை நடத்தினால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.