5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘பால் ஆதார் கார்டு’ – நாடு முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை!

0
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 'பால் ஆதார் கார்டு' - நாடு முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை!
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 'பால் ஆதார் கார்டு' - நாடு முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை!
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘பால் ஆதார் கார்டு’ – நாடு முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை!

இந்திய குடிமக்கள் அனைவரும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். அதன்படி தற்போது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் பால் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனை நாடு முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு

இந்தியாவில் ஆதார் அட்டை தனிநபர் அடையாள ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. இதையடுத்து வங்கிக் கணக்கு, மொபைல் எண் உள்ளிட்ட தனிநபர் கணக்கு சார்ந்தவைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதே போல் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பெற ஆதார் எண் அவசியமானதாகும். இதனால் புதிய ஆதார் அட்டை பெறுவதற்கு நாள்தோறும் ஏராளமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தற்போது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு “பால் ஆதார் கார்டு” எனப்படும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பால் ஆதார் கார்டை பயன்படுத்தி 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கான நலத்திட்டங்களை பெறமுடியும். இந்த பால் ஆதாரில் நீல நிற அட்டையில் குழந்தைகளின் விபரங்கள் அச்சடிக்கப்படுகிறது. அத்துடன் பதிவு செய்வோரின் கைவிரல் ரேகை, கண்விழி உள்ளிட்ட விபரங்கள் பால் ஆதாரில் பதிவு செய்யப்படுவதில்லை. இதையடுத்து குழந்தைகள் 5 வயதை எட்டியதை தொடர்ந்து இந்த பால் ஆதார் கார்டு வழக்கமான ஆதார் கார்டு போன்று மாற்றி தரப்படும்.

TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணம் மட்டுமே! சிறந்த பயிற்சி வகுப்புகள்

இந்த பால் ஆதார் கார்டு வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, குழந்தைகள் பிறக்கும்போது பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் போது பால் ஆதார் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாநில பதிவாளர்களின் உதவியுடன் செய்ய உள்ளதாகவும் முடிவு எடுத்துள்ளது. அதன்படி இனி பால் ஆதார் கார்டை சுலபமாக பெற்று கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான அரசின் நலத்திட்டங்களின் பலன்களையும் விரைவில் பெறலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!