‘கோபியிடம் மன்னிப்பு கேட்டால் தான் பேசுவேன்’ – எழிலிடம் சண்டையிட்ட பாக்கியா! சீரியலில் அடுத்த திருப்பம்!
எழிலின் பட விழாவிற்கு கோபியை மட்டும் அழைக்காத காரணத்தினால் எழில் மீது பாக்கியா மிகவும் கோவப்படுகிறார். இதனால் அப்பாவிடம் நீ மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், மன்னிப்பு கேட்டால் மட்டுமே நான் உன்னிடம் பேசுவேன் எனவும் கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியாவிற்கு எப்போது தான் அனைத்து உண்மைகளும் தெரியவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். வீட்டில் உள்ள அனைவரின் கண்ணிலும் மண்ணை வாரி தூவிவிட்டு ராதிகாவுடான காதலை கோபி வளர்த்து கொண்டிருக்கிறார். கடந்த வாரம் மயூ மற்றும் ராதிகாவை அழைத்து கொண்டு கோபி பார்க்கிற்கு சென்றார்.
பாக்கியலட்சுமி சீரியலில் எழில் எடுத்த முடிவால் கண் கலங்கிய கோபி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதே பார்க்கிற்கு தான் பாக்கியாவும் குடும்பத்துடன் சென்றிருந்தார்கள். அப்போது எழில் கோபியுடன் வேறொரு பெண் இருப்பதை பார்த்து தாத்தாவிடம் சொல்லி அழுகிறார். தாத்தாவும் இதற்கு மேலும் சும்மா இருந்தாலும் கோபியின் ஆட்டம் அடங்காது என நினைத்து பாக்கியாவும் கோபியும் இருக்கும் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு ராதிகாவின் வீட்டிற்கு கிளம்புகிறார். ஆனால் அதற்குள் ராதிகாவை வேறொரு வீட்டிற்கு கோபி அழைத்து சென்றுவிட்டார். இந்நிலையில் கோபி மீது எழில் கொலைவெறியில் இருக்கிறார்.
எழிலின் பட விழாவிற்கு குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்திருந்தார். அங்கு கோபி மட்டும் வரவே இல்லை. ஏன் கோபி வரவில்லை என அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில் நான் தான் அப்பாவை வர கூடாது என கூறினேன் என கூறுகிறார். உடனே பாக்கியா எழில் மீது அதிகமாக கோவப்பட்டு எழிலிடம் பேசாமல் போகிறார். எழிலும் பாக்கியாவிடம் பேசும்படி கெஞ்சுகிறார். அப்பாவிடம் நீ மன்னிப்பு கேட்டால் மட்டுமே நான் உன்னிடம் பேசுவேன் என கூறிவிட்டு கிளம்புகிறார்.