பாக்கியலட்சுமி சீரியலில் எழில் எடுத்த முடிவால் கண் கலங்கிய கோபி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பாக்கியலட்சுமி சீரியல் ஒவ்வொரு நாளும் திடீர் திருப்பங்களையும், பல ட்விஸ்டுகளையும் காட்டி வரும் நிலையில் இன்று நடக்க உள்ள எபிசோட்டில் எழில் சொன்னதை கேட்டு கோபி செய்த காரியம் ஒரு கணம் பாக்கியா மனசை நொறுக்கியது. இதை குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி:
நேற்றைய எபிசோடில் எழில் அவனது பட வேலைகளை முடிந்து விட்டதாக வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லியபோது அப்பாவிடம் இதை சொல்லுமாறு பாக்கியா சொன்ன ஒரு வார்த்தைக்காக அவனும் கோபியை பார்த்து நாளைக்கு என் வாழ்க்கையில முக்கியமான நாள் பிரீவியூ சோ நடக்க இருக்கு அதுக்கு எல்லாரும் வருவாங்க. ஆனா நீங்க தயவு செய்து வந்துறாதீங்க என்று சொன்னப்படியே இன்றைய எபிசோடில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. படத்தை பார்த்து முடித்தவுடன் குடும்பத்தில் உள்ள தாத்தா,பாட்டி என பாக்கியா உட்பட அனைவரும் எழிலை பாராட்டினார்கள்.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டத்தை குறைக்க கோரிக்கை!
ஆனாலும் பாக்கியாவுக்கு கணவர் கோபி வராததால் வருத்தம் இருக்கிறது என பாக்கியா சொல்ல ஈஸ்வரியும் அப்படி என்ன பெரிய வேலை அவன் இதுக்கு வந்திருக்கணும். பெரிய தப்பு பண்ணிட்டான் அவனை சும்மா விடப் போவதில்லை என கோபப்படுகிறாள். வந்தவுடன் கோபியிடம் ஏன்டா நீ வரல? என்று ஈஸ்வரி கேட்க அதற்க்கு கோபியும் எனக்கு வரனும்னு ஆசைதான் ஆனா எழில் என்கிட்ட எனக்கு புடிச்சவங்க எல்லோரும் வராங்க தயவுசெய்து நீங்க வராதீங்க என்று சொன்னான். அப்புறம் நான் எப்படி அங்க வர முடியும் என கோபி சொன்னதைக் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
மேலும், இதனால் எழில் மீது கோபமடைந்த குடும்பத்தினர் சாப்பிடாமல் எழுந்து சென்றனர். பாக்கியாவும்,எழிலிடம் இனி என்கிட்டே நீ பேசக்கூடாது என்று சொல்லி இடத்தை விட்டு நகர்கிறார். அதன்பின்னர் அமிர்தாவிற்கு போன் பண்ணி பேசும் எழில், எப்பவும் நீங்களும் பாப்பாவும் என்கூட இருக்கணும் என சொல்கிறான். அவளும் பதில் எதுவும் சொல்லாமல் போனை வைத்து விடுகிறாள். இதற்கிடையில் பாக்கியா கோபியை பார்க்க சென்று அவனிடம் எழில் தெரியாம பேசிட்டான் அவனை மன்னிச்சுருங்க என சொல்ல, கோபியும் மன உருக்கத்துடன் அவன் ஜெயிச்சா சந்தோஷப்படுற முதல் ஆள் நானாத்தான் இருப்பேன் ஆனா அவனுக்கு என்ன பிடிக்கவே இல்ல என சொல்லி கண் கலங்குவதுடன் எபிசோட் முடிவடைகிறது.