விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் வரப்போகும் திடீர் திருப்பம் – சிறைக்கும் செல்லும் பாக்கியா!
“பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு குழந்தைகளுக்கு உடம்பு சரி இல்லாமல் போகிறது. அதனால் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு பாக்கியா கைது செய்யப்படுகிறார். பாக்கியா மீது பழி சுமத்தப்பட்டு அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படுகிறது.
பாக்கியலட்சுமி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி குடும்பத்தை ஏமாற்றி ராதிகாவுடன் சேர பல வேலைகளை செய்து வருகிறார். இருந்தாலும் கோபி எப்போது மாட்டிக் கொள்வார் என பலர் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இன்றைய எபிசோடில் பாக்கியா சமைத்த உணவை கோபியும் ராதிகாவும் சேர்ந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிமாறுகிறார். அவர்கள் சாப்பிடுவதை பார்த்து கோபியும் ராதிகாவும் சந்தோசப்படுகின்றனர்.
ஆனால் திடீரென அந்த ஆசிரமத்தில் இருந்து போன் வருகிறது. அதில் நீங்க கொடுத்த உணவை சாப்பிட்டு குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டதாக சொல்ல பதறி போய் ராதிகாவும் கோபியும் அங்கே செல்கின்றனர். அங்கே எல்லா குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அப்போது அங்கே போலீஸ் வர நாங்க வெளியே ஆர்டர் கொடுத்து தான் சாப்பாடு வாங்கியதாக சொல்கிறார் கோபி.
அது யார் என போலீஸ் கேட்க ராதிகா பாக்கியா பெயரை சொல்ல போகிறார். அதனால் கேஸ் பாக்கியா மீது வர போகிறது. பாக்கியாவிற்கு செழியன் விவரத்தை சொல்ல என்ன செய்வது என தெரியாமல் பாக்கியா இருக்கிறார். என் மீது தவறு இல்லை என சொல்லியும் போலீசார் அதை கேட்பதாக இல்லை. எழில் எவ்வளவோ பேசி பார்த்தும் கூட போலீசார் கேட்பதாக இல்லை. அதனால் பாக்கியாவிற்கு 6 மாத சிறை தண்டனை கொடுக்கப்படுகிறது. இனிமேல் கோபி ராதிகா வீட்டில் நிம்மதியாக இருக்க போகிறார். இதெல்லாம் அடுத்து வர போகும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.