செழியனை விவாகரத்து செய்ய நினைக்கும் ஜெனி – பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கோபிக்கும் பாக்கியாவிற்கும் விவாகரத்து ஆகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் வேளையில் ஜெனி, இதுக்கு மேல் செழியனுடன் வாழ முடியாது என செழியனை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாக்கியாவை கோபி விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துவிடுவாரா என ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது ஜெனி, செழியனை விட்டு விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெனியும் செழியனும் கல்லூரியில் படிக்கும் போது தான் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
பாக்கியாவிடம் வசமாக சிக்கிய கோபி, ராதிகாவுடன் திருமணம் நடக்குமா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
ஆரம்பத்தில் ஜெனியின் வீட்டிலும் சரி, செழியனின் வீட்டிலும் சரி இவர்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் பிரிய போகிறோம் என பயந்து ஜெனி தற்கொலைக்கு முயற்சி செய்வார். இதன் பின்பு இரண்டு குடும்பமும் கலந்து பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பார்கள். திருமணத்திற்கு பிறகு தினமும் சண்டை போடுவதை மட்டுமே செழியன் வழக்கமாக வைத்திருந்தார். இதனிடையே ஜெனியும் கர்ப்பமானார். ஆனால் இந்த கர்ப்பத்தை கலைக்க சொல்லி தினமும் ஜெனியிடம் செழியன் தகராறு செய்து வந்தார். இப்படி இருக்க திடீரென ஜெனிக்கு எதிர்பாராத விதத்தில் கரு கலைந்துவிடும்.
அப்போது செழியனிடம் சண்டைபோட்டு விட்டு ஜெனி அவரது அம்மா வீட்டிற்கே சென்று விடுகிறார். அதன் பின்பு இனிமேல் அப்படி செய்யமாட்டேன் என கூறி தன்னுடைய வீட்டிற்கு செழியன் அழைத்து வருகிறார். ஆனாலும் தினமும் சண்டைபோட்ட படியே செழியன் இருந்து வருகிறார். பாக்கியாவிற்கு ஜெனி சப்போட் செய்தாலே செழியனுக்கு பிடிக்கவில்லை. இப்படி சண்டை போட்டுக்கொண்டே இருப்பவனிடம் நாம் கண்டிப்பாக சேர்ந்து வாழ வேண்டுமா என ஜெனி யோசிக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் செழியனை விவாகரத்து செய்துவிடலாம் என்கிற முடிவுக்கு ஜெனி வந்துவிடுகிறார். ஒரு புறம் கோபிக்கும் பாக்கியாவிற்கும் விவாகரத்து என சென்று கொண்டிருக்கையில் ஜெனியின் இந்த முடிவு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.