கோலாகலமாக நடக்கும் ராதிகா & கோபி திருமணம், மரணமடையும் ராமமூர்த்தி – வைரல் ப்ரோமோ!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது, பாக்கியலட்சுமி சீரியல். அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து நடைபெற இருக்கும் ட்விஸ்ட் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் ட்விஸ்ட்
தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது, பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் தற்போது முக்கிய கட்டமாக கோபி மற்றும் ராதிகா இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இது அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. கூடுதலாக, பாக்கியா வேறு கோபிக்கு விவாகரத்து வழங்கி விடுகிறார். அதே போல கோபியை வீட்டை விட்டு வெளியே போகுமாறு கூறி விடுகிறார். இந்த முடிவால் இனியா & செழியன் இருவரும் பாக்கியாவிற்கு எதிராக இருக்கின்றனர்.
விவாகரத்து பற்றி உண்மையை சொன்ன எழில், அதிர்ச்சியில் ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் ட்விஸ்ட்!
ஆனால், அனைத்து தடைகளையும் கடந்து கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வதில் மிகவும் உறுதியாக இருக்கிறார். ஆனால், கோபியின் மனைவி பாக்கியா தான் என்று அறிந்து கொள்ளும் ராதிகா மிகவும் குற்ற உணர்வோடு இருக்கிறார். இதனால் திருமணம் பேச்சினை கோபி எடுக்கும் போதெல்லாம் அதனை தவிர்க்க பார்க்கிறார். ஆனால், கோபி மற்றும் ராதிகாவின் அம்மா இருவரும் திருமண ஏற்பாடுகளில் மிகவும் தீவிரமாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பரபரப்பான திருப்பங்களுக்கு மத்தியில் ராதிகா மற்றும் கோபி இருவரது திருமணம் நடைபெறும் என்றும் அவர்களது திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அவரது அப்பா ராமமூர்த்தி மனம் நொந்து போய் மரணம் அடைந்து விடுகிறார். இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதனை அடுத்து கோபி என்ன முடிவு எடுப்பார்? அவரது குடும்பத்தினர் என்ன முடிவினை எடுக்க இருக்கின்றனர் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்