விவாகரத்து பற்றி உண்மையை சொன்ன எழில், அதிர்ச்சியில் ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவின் திருமண ஏற்பாடுகளை சந்துரு ஒரு பக்கம் நடத்தி கொண்டிருக்க, வேற வழி இல்லாமல் ராதிகா திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இந்நிலையில் கோபியை பார்த்த எழில் அவர்களின் வக்கீலிடம் சென்று முக்கியமான உண்மையை தெரிந்து கொள்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில், கோபி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். இந்நிலையில் ராதிகா அதற்கு சம்மதிக்காமல் இருந்த நிலையில், சந்துருவும், ராதிகாவின் அம்மாவும் கோபியுடன் திருமணத்தை நடத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்கள். வேறு வழி இல்லாமல் ராதிகாவும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார். பாக்கியா இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய தொழிலில் மேலும் எப்படி முன்னேறலாம் என்பது பற்றி திட்டமிடுகிறார்.
இப்படி கதை சென்று கொண்டிருக்கும் நிலையில், கோபியும் ராதிகாவும் திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்கின்றனர். அப்போது எழில் அவர்களை பார்த்துவிட்டு இன்னும் அப்பா திருந்தாமல் இருப்பதை பார்த்து வருத்தப்படுகிறார். அந்த நேரம் பார்த்து ராதிகாவின் வக்கீல் வருகிறார். அவர் கோபி ராதிகாவிடம் விவாகரத்து நல்லபடியாக முடிந்துவிட்டது. இனி எப்போது கல்யாணம் என கேட்கிறார். அப்போது எழில் வக்கீலை பார்த்து சந்தேகத்துடன் அவரிடம் பேச வருகிறார்.
PF பெறும் ஓய்வூதியர்கள் கவனத்திற்கு – வாழ்கை சான்றிதழ் குறித்த முக்கிய அறிவிப்பு!
அப்போது எழில் வக்கீலிடம் என் அம்மாவை ஏமாற்றிவிட்டு இப்படி எல்லாம் இருக்கிறார் என சொல்ல, இருவரும் சம்மதத்துடன் தான் விவாகரத்து வாங்கினார்கள் என வக்கீல் சொல்கிறார். ஆனால் எழில் அப்படி எல்லாம் இல்லை என் அம்மாவை ஏமாற்றி தான் விவாகரத்து வாங்கினார் என சொல்கிறார். அப்போது தான் வக்கீலிற்கு எல்லா உண்மையும் தெரிய வருகிறது. அவர் இது பற்றி ராதிகாவிடம் உண்மையை சொல்வாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்