விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ராதிகாவிடம் வசமாக சிக்கிய கோபி!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி தன் குடும்பத்தை ஏமாற்றி ராதிகாவை திருமணம் செய்ய நினைக்கும் நிலையில், தற்போது கோபியின் உண்மையான குணம் என்ன என்பது தெரிய வர இருப்பது போல அடுத்து வரும் எபிசோடுகளில் காட்சிகள் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வர இருக்கும் எபிசோடுகளில் பல திருப்பங்கள் வர இருக்கிறது. கோபி தன்னுடைய குடும்பத்தை விட்டு ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்ய நினைக்கிறார். அது பற்றிய உண்மை கோபியின் அப்பாவிற்கு தெரிய வந்தாலும் அவரால் பேச முடியாத நிலைமை இருக்கிறது. இந்நிலையில் கோபி பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து வாங்க எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். ஆனால் கோபியை பாக்கியா மட்டுமல்லாமல் ராதிகாவும் அதிகமாக நம்புகிறார்.
ராதிகாவிடம் தனது மனைவி மோசமானவள் என சொல்லி தான் கோபி திருமணம் செய்ய நினைக்கிறார். ராதிகாவுக்கு பாக்கியா தான் கோபியின் மனைவி என்ற உண்மை தெரிய வந்தால் அவர் என்ன செய்வார் என தெரியவில்லை. கடந்த எபிசோடுகளில் கோபி ராதிகா வீட்டில் இருக்க அப்போது பாக்கியா வருகிறார். ஆனால் கோபி அவரை பார்க்க மாட்டேன் என சொல்ல, ராதிகாவுக்கு கோபி மீது சிறிது சந்தேகம் வருகிறது. இந்நிலையில் அடுத்து வர போகும் எபிசோடுகளில் ராதிகாவுக்கு கோபியின் மனைவி யார் என்ற உண்மை தெரியப் போகிறது.
அதனால் கோபி ராதிகாவிடம் வசமாக சிக்க, ராதிகா இவ்வளவு கேவலமான ஆளா நீ என கேட்க, அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் கோபி கண்டிப்பாக மாட்டிக் கொள்ளப் போகிறார். அதனால் கோபி ராதிகா திருமணம் நடைபெறுமா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். மேலும் பாக்கியாவிற்கு இந்த உண்மை தெரிய வந்தால் எப்படி ஏற்றுக் கொள்வார் என்பதே சீரியலில் பெரிய திருப்பமாக இருக்கப் போகிறது. அதனால் இனி வரும் எபிசோடுகளில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.