கோலாகலமாக நடைபெற இருக்கும் ராதிகா கோபி திருமண வைபோகம் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவை திருமணம் செய்ய முடிவு செய்து பாக்கியாவிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்குகிறார். இதனால் கோபி, பாக்கியா திருமண வைபோகம் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் வர இருக்கிறது. கோபியின் உண்மையான முகத்தை ராமமூர்த்தி தெரிந்து கொண்டுள்ள நிலையில், அவருக்கு உடம்பு சரி இல்லாமல் போய்விடுகிறது. அதனால் அவரால் பேச முடியாமல் போகிறது. குடும்பமே அவருடைய நிலைமையை நினைத்து வருத்தப்படுகிறார்கள். இந்நிலையில் கோபி திருந்தாமல் இருக்க ராதிகா கோபி மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறார். அதற்காக வக்கீல் வரை சென்றுவிட அவர் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க சொல்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ ஹேமா, லட்சுமியுடன் இணைந்த வில்லி வெண்பா – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
கோபி விவாகரத்து பத்திரத்துடன் வர வீட்டில் கோபி நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என சுமங்கலி பூஜை நடத்துகின்றனர். அதில் பாக்கியாவின் தாலியில் கோபி குங்குமம் வைக்கிறார். அந்த நேரத்தில் கோபியால் எதுவும் பேச முடியவில்லை. இந்நிலையில் கோபியை நம்பி விவாகரத்து பத்திரத்தை படித்து பார்க்காமல் கையெழுத்து போடுவது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதனால் கோபி பாக்கியாவிற்கு தெரியாமல் விவாகரத்து வாங்கிவிட்டார்.
காதலர் தின கவலையில் சமந்தா, தனுஷ் – விவாகரத்தான பிரபலங்கள்! ரசிகர்கள் அதிர்ச்சி!
அடுத்ததாக ராதிகா, கோபியின் திருமண வைபோகம் நடைபெற இருக்கிறது. அந்த விஷயம் பாக்கியா மற்றும் கோபியின் பசங்களுக்கு தெரியவர என்ன மாதிரி பிரச்சனைகள் வர இருக்கிறது என அடுத்து வரும் எபிசோடுகளில் பார்க்கலாம். மேலும் ராதிகாவுக்கு பாக்கியா தான் கோபியின் மனைவி என உண்மை தெரிய வர ராதிகாவின் மனநிலை எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.