‘பாக்கியலட்சுமி’ இனியா தோழி தற்கொலைக்கு காரணமான ஆசிரியரை அடிக்கும் எழில் – அனல் பறக்கும் எபிசோட்!
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அடுத்தடுத்து பல முக்கிய விஷயங்கள் நடந்து வரும் நிலையில், பள்ளியில் இனியாவின் தோழிக்கு நேர்ந்த கொடுமை பற்றி அறிந்து பாக்கியா துணிச்சலாக அதிரடி முடிவெடுக்கிறார். இதனால் அடுத்து சீரியலில் வரப்போகும் விபரீதங்கள் குறித்து காட்சிகள் வர இருக்கிறது.
பாக்கியாவின் துணிச்சல்:
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா புதிதாக ஆபீஸ் திறப்பதில் சிக்கல்கள் வரும் என்று மிகவும் பரபரப்பாக கடந்த வாரம் முதல் காட்சிகள் ஒளிபரப்பி வந்த நிலையில், சிறப்பு விருந்தினர்கள் வருவார்களா மாட்டார்களா என்ற இறுதி வரை காட்சிகள் வந்தது. இறுதியில் சிறப்பு விருந்தினர்கள் வந்து கேட்டரிங் ஆபிஸை திறந்து வைக்கிறார்கள். இதனால் சுமூகமாக பிரச்சனை முடிந்தது. அதன் பிறகு, அந்த ஆபீஸ் நடத்தும் பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு ஆபீஸ் நடக்க கூடாது என்று பிரச்சனை செய்து போலீசில் புகார் அளிக்கின்றனர்.
‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் விவாகரத்து வதந்திகளுக்கு பதிலடி – உற்சாகத்தில் ரசிகர்கள்!
இதனால் போலீஸ் வந்து இங்க இதெல்லாம் நடத்த கூடாது என்று சொல்கிறது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பாக்கியா துணிச்சலாக போலீசிடம் பேசி, விஷயத்தை புரிய வைக்கிறார். இதனால் அவர்கள் திரும்பி சென்று விடுகிறார்கள். இதனால் பாக்கியாவிற்கே தன் மேல் ஒரு தனி நம்பிக்கை வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இனியாவில் பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்று காட்டப்பட்டது. இதில் இனியாவின் தோழி நிகிலா அதிகம் பாதிக்கப்படுவது போல் காட்டப்பட்டது.
கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு தங்களது ரூமை கொடுத்த தனம் & மூர்த்தி – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!
இதனால் இந்த மனஅழுத்தத்தின் காரணமாக நிகிலா தற்கொலை செய்து கொள்கிறாள். இதன்பிறகு தான் இனியா நடந்த விஷயங்களை இனியா, பாக்யாவிடம் சொல்கிறாள். இதனால் கோபமடைந்த பாக்கியா பள்ளிக்கு சென்று கேட்கிறார். ஆனால் தவறு செய்த ஆசிரியர் பள்ளி நிர்வாகியின் உறவினர் என்பதால் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோவப்படும் பாக்கியா எழிலை வைத்து அந்த ஆசிரியரை அடிக்க சொல்கிறார். இதனால் பெரிய பிரச்சனை நடக்கிறது. இந்த அனல் பறக்கும் காட்சிகள் வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.