‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் விவாகரத்து வதந்திகளுக்கு பதிலடி – உற்சாகத்தில் ரசிகர்கள்!
திருமணம் ஆன ஒரு மாதத்தில் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக செம்பருத்தி ஷபானா மற்றும் ஆர்யன் தம்பதிகள் பற்றி வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது அந்த வதந்திகளுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு போட்டோ பதிவிடப்பட்டுள்ளது.
ஷபானா & ஆர்யன்:
சின்னத்திரையில் கடந்த மாதம் முதல் அடுத்தடுத்து பல பிரபலங்களுக்கும் திருமணங்கள் நடந்து வந்தது. இந்த திருமண கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்த ஜோடியினர் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் ஷபானா மற்றும் விஜய் டிவி பாக்யலக்ஷ்மி ஆர்யன் தான். நவம்பர் 11ம் தேதி இவர்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த ட்ரெண்டிங் கப்பிள்ஸ்ன் திருமணத்தை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தங்கள் விருப்ப ஜோடியின் திருமணத்தை கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு தங்களது ரூமை கொடுத்த தனம் & மூர்த்தி – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!
திருமணத்திற்கு பிறகும், இவர்கள் ஹனிமூன் போட்டோக்கள், நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் அனைத்தும் மிகவும் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வந்தது. இந்நிலையில், இந்த மாத தொடக்கம் முதல் திடீரென்று இந்த ஜோடியினரை பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வந்தது. இவர்கள் குடும்பத்தினருக்கு ஒத்து வரவில்லை. அதனால் ஆர்யன் வீட்டில் வேறு பெண் பார்க்கிறார்கள். ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் பிரிந்து விட்டார்கள். தனியாக வாழ்கிறார்கள். விரைவில் விவாகரத்து பெற போகிறார்கள் என்று பல வதந்திகள் வந்தது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
இந்த தகவல் பற்றி ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் எந்த விளக்கமும் கொடுக்காமல் அமைதியாக இருந்து வந்தனர். இதனால் தகவல்கள் அனைத்தும், உண்மை தான் என்று பலரும் நினைத்துக் கொண்டனர். இந்நிலையில், நேற்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஷபானாவும், ஆர்யனும் தங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை போட்டோவாக பதிவிட்டுள்ளனர். இந்த போட்டோவை பார்த்த இவர்களின் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும், தங்களின் விருப்பமான ஜோடியை பற்றி வந்த வதந்திகளுக்கு சரியான பதிலடி கிடைத்துள்ளதால் உற்சாகத்தில் உள்ளனர்.