இனியாவா? மயூராவா? இரு குழந்தைகளுக்கு இடையில் மாட்டிக் கொண்ட கோபி – எடுக்கப்போகும் முடிவு என்ன?

0
இனியாவா? மயூராவா? இரு குழந்தைகளுக்கு இடையில் மாட்டிக் கொண்ட கோபி - எடுக்கப்போகும் முடிவு என்ன?
இனியாவா? மயூராவா? இரு குழந்தைகளுக்கு இடையில் மாட்டிக் கொண்ட கோபி - எடுக்கப்போகும் முடிவு என்ன?
இனியாவா? மயூராவா? இரு குழந்தைகளுக்கு இடையில் மாட்டிக் கொண்ட கோபி – எடுக்கப்போகும் முடிவு என்ன?

பாக்கியலட்சுமி தொடர் கடந்த சில நாட்களாகவே சுவாரசியம் குறையாமல் பல திருப்பங்களுடன் நகர்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் தனது மகளா ? காதலியின் மகளா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் கோபி எடுக்க போகும் முடிவு என்ன என்பதை பாப்போம்.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் கடந்த சில நாட்களாக டி ஆர் பி ரேட்டிங்கில் முதலிடம் பெறும் அளவுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. மேலும், இன்றைய எபிசோடில் ஜெனி,செழியன் அறைக்கு சென்ற கோபி இருவரிடமும் பேசினார். அதாவது காதல் வாழ்க்கையில் உள்ளது போலவே திருமணம் வாழ்க்கையிலும் இருக்கும் என நினைப்பது தவறு, ஒருவொருக்கொருவர் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றும், செழியனை பார்த்து உன்னை பாக்கியா அடித்தது தப்புதான் ஆனால் நீ எடுத்த முடிவு அதைவிட தப்பான ஒன்னு, உங்க ரெண்டு பேருக்கும் உள்ள பிரச்சனைய நீங்களே பேசி தீர்த்துக்க பாருங்க வீடு வரைக்கும் கொண்டுவராதிங்க என்று அட்வைஸ் பண்ணிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

ஒரே நாளில் சுற்றுலா செல்ல திட்டமிடும் இனியா, மயூரா மாட்டிக் கொள்ளும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

வீட்டில் நடந்த சண்டையை குறித்து எழிலிடம், இனியா சொல்லத் தொடங்கினார். எல்லாத்தையும் எழில் கேட்டுட்டு எங்கயாவது வெளிய போலாம். அப்போதுதான் இப்படி சண்டைலாம் வராம இருக்கும் என சொல்ல உடனே ஈஸ்வரி நீங்கல்லாம் போயிட்டு வாங்க நானும், தாத்தாவும் இங்க இருந்துக்குறோம் என்று சொல்கிறார். அதுக்கு எழில் நீங்களும் சேர்ந்துதான் எங்க கூட வரணும் என்று சொல்லி முடிக்கிறான். அந்த சமயம் கோபி வருகை தர , அவனிடம் இனியா சென்று அப்பா எல்லாரும் சேர்ந்து பிக்னிக் போகலாம் என்று சொல்ல அதற்கு கோபி உடனே, இல்லை எனக்கு முக்கிய வேலை இருக்கு என்று சொல்கிறான். அதற்கு கோபம் கொண்ட இனியா நீங்க கண்டிப்பா வரணும், இல்லனா உங்கட பேசவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு மாடிக்கு செல்கிறாள்.

இந்த பக்கம் ராதிகா மகள் மயூ நாளைக்கு பிக்னிக் போக போறோம் என்பதில் ஆர்வமாக இருக்க, அப்போது வந்த கோபி அவளிடமும் ஒரு முக்கியமான வேலை ரெண்டு நாள் கழிச்சு போகலாம் இல்லனா ஒரு வாரம் தள்ளிப் போடலாம் என சொல்கிறான். அதை கேட்ட மயூ கோபித்து கொண்டு அறைக்கு செல்கிறாள். இதனால் கோபமடைந்த ராதிகா வெளியே போறோம்னு சொல்லி அவ மனசுல ஆசைய வளர்த்துட்டு இப்போ வந்து எதுக்கு ஏமாத்துறிங்க, எப்ப பார்த்தாலும் எங்க கிட்ட ஒரு கமிட்மென்ட் கொடுக்க வேண்டியது அதுக்கு அப்றம் வேலைய காரணம் காட்டி எக்ஸ்க்யூஸ் கேட்க வேண்டியது இதுவே உங்க வேலையா போச்சு என்று சொல்லவும் உடனே கோபி சரி எவ்ளோ வேலையா இருந்தாலும் எல்லாத்தையும் ஒதுக்கிட்டு உங்களுக்காக வரேன் போதுமா என்று சமாதானம் செய்கிறார். ஆனாலும் மனதுக்குள் இனியாவிடம் என்ன சொல்வது என்ற குழப்பத்தில் எபிசோட் முடிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!